திங்கள், 31 அக்டோபர், 2022

எதிரிகள் அழிய எந்திரம்


 

எதிரியின் வீடு தொழில் நசிந்து போக யந்திரம்


 

எதிரியின் வியாபார நிலையங்கள் நசிந்து தொழில் முடக்கம் ஆக யந்திரம்


 

வியாபாரத்தில் அதிக பணவரவு பெற யந்திரம்


 

பிரிந்து போனவர்கள் திரும்பி வர யந்திரம்


 

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

பரிகார மர்மம்

            

பரிகார மர்மம்



 ஜாதகத்தில் தோஷத்தை தரும் கிரகம் நிற்கும் இராசிகளை வைத்துதான் அதற்கான பரிகாரங்களை செய்ய வேண்டும். அத்தகைய   பரிகார மர்மம் முன்னோர்கள் மறைத்து வைத்திருந்தனர். அந்த பரிகார மர்மம் இரகசியத்தை இங்கே விரிவாக பார்போம்.

  நெருப்பு இராசிகள் பரிகார மர்மம் - மேஷம், சிம்மம், தனுசு.
  நில இராசிகள் பரிகார மர்மம் - ரிஷபம், கன்னி, மகரம்.
  காற்று இராசிகள் பரிகார மர்மம் - மிதுனம், துலாம், கும்பம்.
  நீர் இராசிகள் பரிகார மர்மம் - கடகம், விருட்சிகம், மீனம்.

              நில இராசி பரிகார மர்மம் - இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அந்த கிரகத்திற்கு உண்டான அதிஷ்ட கற்களை அணிந்து கொண்டால்  தோஷம் நீங்கும்.
              காற்று இராசி பரிகார மர்மம் - இராசியில் தோஷம்  செய்யும் கிரகம் இருந்தால் அந்த  கிரகத்திற்குரிய மந்திர ஜெபம் பூஜைகள் செய்ய தோஷம் நீங்கும்.
             நீர் இராசி பரிகார மர்மம் - இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அக்கிரகத்துக்குறிய பொருட்களை தானம் செய்யலாம், மீன்களுக்கு இறையாக நீரில் இடலாம்.
            நெருப்பு இராசி பரிகார மர்மம் - இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அக்கிரகத்திற்குரிய தீபாராதனை, யாகபூஜைகள் செய்யலாம்.

        இவ்விதம் தோஷம் செய்யும் கிரகம் இருக்கும் இராசிக்கு  உண்டான இராசி (பரிகார மர்மம்) பரிகாரங்களை,  நீங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ, தோஷம் தரும் கிரகத்தின் நாளிலோ தங்களுக்குண்டான இராசி பரிகார மர்மம் சொல்லிய பரிகாரங்களை செய்ய உடனே தோஷம் நீங்கும். 

தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் அவதார வரலாறு

   


    
தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன்





                        தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் ஆலய வரலாறு பற்றி இந்த பதிவினில் நாம் விளக்கமாக காணவிருக்கிறோம். தமிழகத்தில் தென்கயிலை என்று போற்றுதலுக்கு உரிய மேற்கு தொடர்ச்சி மலையில் எண்ணிலடங்கா புகழ்பெற்ற ஆலயங்களும், சித்தர்கள் தவமியற்றிய மலைகளும், குகைகளும் அமைந்துள்ளதனை அனைவரும் அறிவோம். மேற்கு தொடர்ச்சி மலையாம் தென்கைலாயத்தில் பூண்டி வெள்ளியங்கிரி, பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம், பழநி பாலதண்டாயுதபாணி ஆலயம், மருதமலை முருகர் ஆலயம், பாலமலை அரங்கநாதர் ஆலயம், காரமடை அரங்கநாதர் ஆலயம், ஓதிமலை முருகர் ஆலயம், பண்ணாரி மாரியம்மன் ஆலயம் போன்ற அருட்பொதிந்த ஆலயங்கள் ஏராளம் ஏராளம்.




தென்கயிலை நெல்லிமலை தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் :

நெல்லிமலை
                   
                           
                        மேற்கண்டவகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அற்புத ஆலயம் தான் தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் ஆலயம். தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் வரலாறு பற்றி நாம் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்றால் சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன்பான பஞ்சபாண்டவர்களின் காலத்துக்கு பின்நோக்கி நாம் செல்ல வேண்டும்.


                           தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் ஆலயம் தென்கயிலை என்று போற்றப்படும் மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரல் நெல்லிமலையில் அடிவார வனத்தினில் அமைந்துள்ளது. நிலவளமும், நீர்வளமும் அமைந்த மலைச்சாரல் தான் நெல்லிமலை. வற்றாத ஜீவநதியாம் பவானி ஆறு பவனி வரும் பகுதியாகும். யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமை, மான் போன்ற பலதரப்பட்ட விலங்குகளும், பறவைகளும் வாழும் அடர்ந்தகாடு நெல்லிமலை ஆகும்.


                         அத்தகைய நெல்லிமலையின் அடிவாரத்தில் நீர்வளத்தால் தென்னை மற்றும் பாக்கு தோப்புகளும், வாழை தோட்டங்களும், காய்கறி விவசாயமும் செழித்து விளங்கும் இயற்கை எழில் கொஞ்சும் பசுமை தாயகமம் நெல்லிமலை சாரல். இத்தகைய இயற்கை சூழலில் வனத்தினில் சுமார் 5500 வருடங்களுக்கு முன்பு வந்தமர்ந்து கோயில் கொண்டு அருளாட்சி செய்பவள் தான் அன்னை தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன்.




தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் - பவானி நதி தீர்த்தம் :


பவானி நதி
                                  


                                    "சந்துவரு வாணி நீரினும் தீன்தண்
                                     சாயலன் மன்ற தானே" - பதிற்றுபத்து.


                             வாணி என்றால் கலைமகள் (சரஸ்வதி), வாணி நதி என்று பதிற்றுபத்து சிறப்பிக்கும் நதியானது பவனி வருவதால் பவானி என்று பெயர் பெற்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற பவானி நதி தீர்த்தமானது தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் ஆலயத்தின் அருகில் தெற்கில் இருந்து வடக்கு திசையை நோக்கி பாய்கிறது. புண்ணிய தீர்த்தமான தெற்கிலிருந்து வடக்கு திசையில் ஓடுவது தனி சிறப்பு கொண்டதாகும்.





தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் - ஆரவல்லி சூரவல்லி இராஜ்யமும் :


ஆரவல்லி சூரவல்லி இராஜ்யம்

                                  
                                   சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்ச பாண்டவர் வாழ்ந்த காலத்தில் இன்றைய கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் உள்ள கொள்ளேகால் தாலூக்காவுக்கும், பவானி தாலூக்காவுக்கும் எல்லையில் அமைந்துள்ள பாலாறு கரையில் உள்ள நல்லூர் என்ற பகுதி முதல் கொங்கு மண்டலத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் தென்கயிலை எனும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி நெல்லி மலை பகுதிகளை எல்லாம் கோட்டை கட்டி, கொடி கட்டி ஆண்டுவந்தனர் ஆரவல்லி, சூரவல்லி, வீரவல்லி, பகவதி என்ற பெயர் கொண்ட ஏழு சகோதரிகள்.


                               இவர்கள் எழுவரில் ஆரவல்லி அரசியாகவும், சூரவல்லி மந்திரியாகவும் மற்ற ஐவரும் அமைச்சர்களாகவும் கொண்டு இராஜ்யத்தை ஆண்டு வந்தார்கள். இவர்களின் ஆட்சியில் ஆண்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி பெண்களே ஆளும் அல்லி இராஜ்ஜியத்தை நடத்தி வந்தனர்.


                           அரவல்லிக்கு பல்வரிசை (அலங்காரவல்லி) என்ற பேரழகு பொருந்திய மகள் ஒருவள் இருந்தாள். பல்வரிசை எனும் அலங்காரவல்லியின் பேரழகிற்கும், கவர்ச்சிக்கும், நளினத்திற்கும் மயங்காத ஆடவர்களோ, இளவரசர்களோ, அரசர்களோ உலகில் கிடையாது. அப்பேர்ப்பட்ட அரவல்லியின் மகள் பல்வரிசை எனும் அலங்காரவல்லிக்கு சுயம்வரம் (திருமணம்) செய்வது என்பது சர்வ சாதாரணமா என்ன?


                          இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நான் பதிவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகள் எழுவரும் காளியின் அருள்பெற்று சாகாவரம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காளியின் அருளோடு மந்திரம், தந்திரம், செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் என்ற மந்திர தந்திர வித்தைகளில் உலகில் கைதேர்ந்தவர்களாக விளங்கியவர்கள். இவர்களின் மந்திர, தந்திர வித்தைகளை எதிர்த்து போட்டியிட்டு ஜெயித்தவர்கள் அந்நாள் வரையில் உலகில் யாரும் இல்லை என்பதே வரலாறு சொல்லும் உண்மை.


                           மீண்டும் விஷயத்திற்கு வருவோம். பேரழகியான ஆரவல்லி மகள் பல்வரிசை எனும் அலங்காரவல்லியை திருமணம் செய்ய விரும்பும் ஆடவர்கள் யாராயினும் ஆரவல்லி, சூரவல்லி வைக்கும் போட்டிகளில் வெல்ல வேண்டும். இவர்களின் மந்திர தந்திர வித்தைகளை உலகில் எந்த ஆடவர்களாலும், அரசர்களாலும், இளவரசர்களாலும் ஜெயிக்க இயலாது. இவர்கள் வைக்கும் போட்டிகளில் தோல்வியடைந்தாலோ அல்லது போட்டிகளுக்கு பயந்து இடையில் விலகினாலோ ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகளுக்கு அடிமையாகி பாதாள சிறையில் அடைக்கப்படுவதோடு, கொத்தடிமைகளாக பணிபுரிய வேண்டும்.





பஞ்சபாண்டவர் - பீமன் வருகை :


 
பீமன்


                              ஆரவல்லி சூரவல்லியின் அல்லி இராஜ்ஜிய அட்டகாசங்கள் பஞ்ச பாண்டவர்களின் அஸ்தினபுர அரண்மனைக்கு எட்டியது. இவர்களின் அராஜகங்களை கேள்வியுற்ற பீமன் கொதித்தெழுந்தான். பீமன் எந்த போரிலும் தோல்வியே தழுவாத மாவீரன். பீமன் ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளின் கொட்டத்தை அடக்கியே தீருவேன் என்று சபதமேற்று ஆரவல்லி சூரவல்லி அரண்மனையை நோக்கி புறப்பட்டான்.


                             ஆரவல்லி சூரவல்லி அரண்மனையை அடைந்து அவர்கள் வைக்கும் போட்டிகளில் கலந்துகொண்டான் பீமன். ஆரவல்லி சூரவல்லி வைக்கும் போட்டிகள் மந்திர தந்திர வழியில் நடத்தப்படும் சூழ்ச்சிகள், நேர்மையான போட்டிகள் இல்லை என்று அறியாத பீமன் அவர்களின் போட்டிகளை எதிர்கொண்டான். அந்த போட்டிகளில் இரண்டு போட்டிகளில் பீமன் வெற்றிகண்டான். இரண்டு போட்டிகளில் பீமன் வென்றதை பார்த்து கலக்கம் கொண்ட ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளின் மூன்றாவது போட்டியில் மந்திர தந்திர வித்தைகளை பயன்படுத்தி பீமனை தோல்வியடைய செய்தனர். பீமன் பாதாள சிறையில் அடைக்கப்பட்டார்.


                            தந்திரத்தை சூழ்ச்சியை சூழ்ச்சியால் தான் வெல்ல வேண்டும் என்று பீமன் பாதாள சிறையில் இருந்து தப்பி தனது இராஜ்ஜியமான அஸ்தினாபுரம் வந்தடைந்தார். இதனை அறிந்த அரவல்லி சூரவல்லி அஸ்த்தினாபுரம் அரண்மனை சென்று அஸ்தினாபுர அரசனான தர்மனிடம் வழக்கு தொடுத்தனர். போட்டியில் தோல்வியுற்று கைதியாகி சிறைப்பட்ட பீமன், சிறையில் இருந்து தப்பியோடி அஸ்த்தினாபுரம் வந்தது எவ்வகையில் நியாயம் என்று வாதிட்டனர். தர்மம் தவறாத தர்ம மகாராஜா மீண்டும் பீமனை ஆரவல்லி சூரவல்லி உடன் கைதியாக அனுப்பிவைத்தார். பீமன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான்.






கிருஷ்ண பரமாத்மா - பஞ்ச பாண்டவர் ஆலோசனை :


கிருஷ்ண பரமாத்மா - பஞ்ச பாண்டவர் ஆலோசனை

                                                

                               பீமன் சிறைப்பட்ட செய்தியை தருமர் மூலமாக அறிந்த கிருஷ்ண பரமாத்மா பீமனை மீட்கும் பொருட்டு பஞ்சபாண்டவர்களில் தர்மர், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வருடன் கலந்தாலோசித்தார். இவர்களில் சகாதேவன் சகல ஜோதிட சாஸ்திர வித்வான் ஆவார்.


                          சகாதேவா பீமனை மீட்க என்ன வழி இருக்கிறதென்று உனது ஜோதிட சாஸ்திரம் மூலம் அறிந்து சொல் என்று கட்டளையிட்டார் கிருஷ்ண பரமாத்மா! ஆரவல்லி சூரவல்லி சகோதரிகள் காளியின் அருள் பெற்றவர்கள். காளியின் அருளால் மந்திர தந்திர வித்தைகளை கற்று ஈடு இணையற்றவர்கள். காளி தேவியினால் சாகாவரமும் பெற்று வாழ்பவர்கள். இவர்களை ஜெயித்து பீமனை காக்க வேண்டும் என்றால் அதற்கு என்ன வழி இருக்கிறது என்பதனை சகாதேவர் ஜோதிட சாஸ்திரம் மூலம் ஆராய்ந்து சொல்லலானார்.


                        அவரது ஜோதிட சாஸ்திரத்தில் ஆரவல்லி மகள் பல்வரிசை எனும் அலங்காரவல்லியின் கணவனாக வருபவரது பெயர் அல்லிமுத்து என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிட்டது. இந்த அல்லிமுத்து பஞ்ச பாண்டவர்களின் தங்கை மகன் பெயர். உடனே தர்மர் தனது தங்கையின் இல்லம் நோக்கி விரைந்தார். உனது மகன் அல்லிமுத்துவால் தான் ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளை வெல்ல முடியும் எனவே அல்லிமுத்துவை உடனே ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளின் அல்லி இராஜ்ஜியத்துக்கு அனுப்பி வைக்க வேண்டினார். முதலில் அல்லிமுத்துவை அனுப்ப ஒப்புக்கொள்ளாத தங்கை பின் தருமரும், அல்லிமுத்துவும் சொன்ன வார்த்தைகளை ஏற்று அல்லிமுத்துவை ஆரவல்லி சூரவல்லி இராஜ்ஜியத்துக்கு அனுப்பி வைத்தாள்.




ஆரவல்லி சூரவல்லி இராஜ்ஜியம் - அல்லிமுத்து வருகை :


ஆரவல்லி சூரவல்லி

                                         

                                       ஆரவல்லி சூரவல்லியின் அல்லி இராஜ்ஜியம் வந்தடைந்தார் அல்லிமுத்து. நெல்லிமலை சாரல் வந்தடைந்த அல்லிமுத்து பவானி நதி தீர்த்தமாடி தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் சன்னதி வந்து ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளின் மந்திர தந்திர வித்தைகளை அடக்கி அவர்களை வெல்ல அருள்புரியுமாறு தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மனை மனமுருக வேண்டி ஆசிபெற்றார்.


                                தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் அருளைப்பெற்று பவானி நதியை கடந்து நெல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆரவல்லி சூரவல்லி கோட்டையை அடைந்தான். தேவியின் அருளால் ஆரவல்லி சூரவல்லி வைத்த மூன்று போட்டிகளிலும் அல்லிமுத்து வென்றான். அரவல்லியின் மகள் பல்வரிசை எனும் அலங்காரவல்லியையும் கரம்பிடித்தான். ஆரவல்லி சூரவல்லியால் அடிமை சிறைப்பட்டிருந்த பீமன் மற்றும் அனைவரையும் விடுதலை செய்தான்.பீமனை உடனே பாண்டவர்களின் அசத்தினாபுரம் அரண்மனை செல்ல பணித்தான். தான் பல்வரிசை எனும் அலங்காரவல்லியுடன் நாளை வருவதாகவும் அதற்க்கு உண்டான வரவேற்பு ஏற்பாடுகளை செயுமாறு சொல்லி பீமனை அனுப்பிவைத்தான். அரவல்லியின் மகளை கரம்பிடித்து, அரவல்லியின் இராஜ்ஜியத்தின் அரசனாக ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளிடம் சாசனம் எழுதி பெற்றுக்கொண்டான்.




ஆரவல்லி சூரவல்லி சூழ்ச்சி - அல்லிமுத்து மரணம் :


ஆரவல்லி சூரவல்லி

                                       


                                         ஆரவல்லி சூரவல்லி இராஜ்ஜியத்தை கைப்பற்றி, ஆரவல்லி மகள் பல்வரிசை எனும் அலங்காரவல்லியை கரம்பிடித்து அல்லிமுத்து பாண்டவர் இராஜ்ஜியமான அஸ்த்தினாபுரம் புறப்பட்டான். அல்லிமுத்துவிடம் தோல்வி அடைந்ததால் ஆத்திரம் கொண்ட ஆரவல்லி சூரவல்லி சகோதரிகள் அல்லிமுத்துவை பழிவாங்க திட்டம் தீட்டினார்கள். எலுமிச்சம் கனியில் மந்திர உருவேற்றியும், தின்பண்டங்களில் நாகபாஷாணங்களை தடவியும் அல்லிமுத்துவுக்கு உண்ண கொடுத்து அல்லிமுத்துவை கொல்ல சதி செய்தனர். மந்திர உருவேற்றிய எலுமிச்சம் கனியையும், நாகபாஷாணம் கலந்த தின்பண்டங்களையும் ஆரவல்லி தனது மகள் பல்வரிசை எனும் அலங்காரவல்லியிடம் கொடுத்து செல்லும் வழியில் பசி தாகம் உண்டானால் அல்லிமுத்துவுக்கு இவைகளை உண்ண தரும்படி தனது மகளிடம் பாசமாக பேசி நல்லவர்கள் போல நாடகமாடினார்கள் ஆரவல்லி சூரவல்லி சகோதரிகள்.


                                         ஆரவல்லி சூரவல்லி செய்த சூழிச்சி பல்வரிசை எனும் அலங்காரவல்லிக்கு தெரிந்திருக்கவில்லை. அஸ்தினாபுரம் செல்லும் வழியில் களைப்பாற இரத்தத்தை நிறுத்தி இளைப்பாறிய வேளையில், அல்லிமுத்துவுக்கு விஷம் கலந்த தின்பண்டங்களையும், அருந்துவதற்கு எலுமிச்சை பழ இரசத்தையும் பல்வரிசை எனும் அலங்காரவல்லி கொடுத்தாள். உண்ட சில நிமிடங்களில் அல்லிமுத்துவின் உயிர் பிரிந்தது.



அபிமன்யு வருகையும் - அல்லிமுத்து உயர்பெற்றதும் :


அபிமன்யு

                                             
                             அல்லிமுத்துவின் மரண செய்தி அஸ்த்தினாபுர பாண்டவர்களின் இராஜ்ஜியத்துக்கு எட்டியது. இவர்களில் அர்ச்சுனனின் மகன் அபிமன்யு, அல்லிமுத்துவின் உயிரை மீட்டு வர ஆயத்தமானான். நெல்லிமலை விரைந்தான். தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் ஆலயம் வந்து அல்லிமுத்துவின் உயிரை மீட்க உபயம் சொல்லி அருள வேண்டினான்.
அன்னையின் அருளாசியோடு விண்ணுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டு உடலுடன் சேர்த்து அல்லிமுத்துவை உயிர்பெற செய்தான்.



ஆரவல்லி சூரவல்லியுடன் போர் :


ஆரவல்லி சூரவல்லியுடன் போர்

                                         

                                             உயிர் மீண்ட அல்லிமுத்துவும், அவர்களால் சிறைப்பட்ட பீமனும் அவர்களுடன் அர்ச்சுனனும், அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவும் ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளின் சூழ்ச்சிகளுக்கும், மந்திர தந்திர வித்தைகளுக்கும் இனி உலகில் யாரும் பலியாக கூடாது, அவர்களின் ஆணவத்தை அடக்கி ஒடுக்கி இராஜ்ஜியத்தை விட்டே விரட்டவேண்டும் என்று சபதமேற்றனர்.


                                          கிருஷ்ண பரமாத்மா மற்றும் சகாதேவரின் சாஸ்த்திர ஆலோசனைகளை சிரமேற்று ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகளுடன் போரிட புறப்பட்டனர். ஆரவல்லி சூரவல்லி சகோதரிகள் தங்களது மந்திர தந்திரங்களால் புலிகளையும், கரடிகளையும் சூனியத்தால் உருவாக்கி போரிட வைத்தனர். மகா பலசாலியான பீமனும், அஸ்திரவித்தைகளில் கைதேர்ந்தவனான அர்ச்சுனனும், சக்ராயுத போர்முறையில் வல்லவனான அபிமன்யுவும், அல்லிமுத்துவும் இவர்களின் மந்திர தந்திர சூன்ய சக்திகளை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கினர்.


                                      பின் காளியின் அருள்பெற்றவர்களை வெல்ல காளியே அருள் தர முடியும் என்று எண்ணி தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் ஆலயம் நாடி வனபத்ரகாளி அம்மனை வேண்டி நின்றனர். மது கைடபர்களை அழித்தவளே! மகிஷனை கொன்றவளே! தூம்ரலோசனை நசுக்கியவளே! சண்ட - முண்ட அசுரர்களை வதைத்தவளே! ரக்த பீஜனை ஒழித்தவளே! சும்ப, நிசும்ப, சம்புவை அழித்தவளே! உன்னால் அருள்பெற்று உலகை மாய மந்திர தந்திர சூழ்ச்சிகளால் வதைக்கும் ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளின் ஆணவத்தை அடக்கி அவர்களை விரட்ட நீயே அருள்தர வேண்டும் என்று வேண்டினர். உலகில் அசுரர்களை எல்லாம் அழித்து ஒழித்து பக்தர்களை காக்கும் மஹாசக்தியான தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன், உலக உயிர்களை காக்கும் பொருட்டும், தனது சக்தியால் உருவாகி அசுரர்களாக மாறி உலக உயிர்களை வதைக்கும் ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளின் கொட்டத்தை அடக்க அருள்புரிந்து ஆசியும் தந்தாள்.


                                       தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் ஆசிபெற்ற பீமன், அர்ச்சுனன், அபிமன்யு, அல்லிமுத்து நால்வரும் ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளுடன் போரிட்டு வெற்றி பெற்றனர். அப்போரில் அம்மன் அருளிய ஆயுதத்தால் சாகாவரம் பெற்ற ஆரவல்லி சூரவல்லியும் மாண்டனர். வீரவல்லியும், பகவதியும் அன்னையிடம் சரணாகதி அடைந்து உயிர்பிச்சை அளிக்கும்படி மன்றாடினர். அவர்கள் இருவருக்கும் உபயம் அருளிய தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் மீண்டும் இத்தகைய அக்கிரமங்களை செய்யாமல் தான் அருளிய மந்திர தந்திர சூனிய வித்தைகளை நீங்கள் மக்களின் நல்வாழ்வுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி இவ்விடம் விட்டு வேறு தேசம் புகுந்து என்னுடைய பக்தர்களை காக்கும் பணியை செய்ய பணித்தாள்.


                                                  உயிர் தப்பிய வீரவல்லி கொல்லிமலையில் தஞ்சம் புகுந்தாள், எனவே தான் கொல்லிமலையில் மாந்திரீகம் வளர்ந்தது. பகவதி மலையாள தேசம் சென்று வாழலானாள், எனவே தான் மலையாள தேசமான கேரளாவில் மாந்திரீக சாஸ்திரம் வளர்ந்தது.


                                              உலகிலேயே மந்திர தந்திர சூனிய சாஸ்திரங்களின் பிறப்பிடமாக விளங்குவது தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் ஆலயம் அமைந்துள்ள நெல்லிமலை பகுதிகளாகும். காளியே மந்திர தந்திர சூனிய வித்தைகளின் நாயகி ஆகும். காளியே துஷ்ட மாத்திர தந்திர சூனிய விதைகளான செய்வினை, ஏவல், பில்லி, சூனிய வித்தைகளை போக்கி அருளும் தேவியும் ஆவாள்.


                                            இத்தகைய ஆற்றல் வாய்ந்த ஸ்தலமான தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மனின் அனுகிரகம் பெற்று சிறுவயது முதல் தேவியின் மீது பற்றுக்கொண்டு இன்று காளியின் புத்திரன் என்று எல்லோரும் போற்றும் சுவாமிகள், தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் கோவில் நுழைவு வாயில் அருகில் "காளி மந்திர ஆலயம்" என்ற பெயரில் ஆசிரமம் அமைத்து ஜோதிடம், பிரசன்ன ஜோதிடம், சித்த மருத்துவம், அஷ்ட கர்ம மாந்திரீகம் ( வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆகர்ஷணம், பேதனம், வித்வேஷணம், மாரணம்), சாபங்கள், தோஷங்கள் நீங்க பரிகார பூஜைகள், யாக பூஜைகள் முதலிய கலைகள் மூலம் உங்கள் வாழ்வில் தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வினை உண்டாக்கி தருகிறார். தொடர்புக்கு : காளி மந்திர ஆலயம். செல் : 99440 99980, 85260 74891.




ஆரவல்லி சூரவல்லி சூனியம் புரியாத மர்மங்கள் :

 
1.ஆரவல்லி சூரவல்லி சகோதரிகள் நீராட தங்களது கோட்டையில் இருந்து பவானி நதிக்கு வருவார்களாம். அவர்கள் நீராடும் பகுதிக்கு எந்த ஆண்களும் அப்பகுதிக்கு வரமுடியாத படி சூனியம் செய்து வைத்திருந்தார்களாம். அதனை மீறி நதியில் இறங்கி நீராடினால் அந்த சூனியத்தில் சிக்கி இறந்து போய்விடுவார்கள் என்ற செவிவழி செய்திகளும் இங்கு வாழும் மக்களால் சொல்லப்படுகிறது. 5500 வருடங்களை கடந்த பின்பும் இத்தகைய மர்மமான மரணங்கள் இன்றுவரை தொடர்வது மர்மமே.

2. ஆரவல்லி சூரவல்லி சகோதரிகள் வாழ்ந்த கோட்டை, வேறு யாரும் நுழைய முடியாதபடி பலவித சூனியங்கள் ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளால் செய்து வைக்கப்பட்டிருந்ததாம். அந்த கோட்டை 5500 வருடங்களாக முழுவதும் அழிந்து போகும் நிலை வரையிலும் அந்த கோட்டையின் உள்ளே நுழைந்தவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்ற செவிவழி செய்திகளும் சொல்லப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன் ஆரவல்லி சூரவல்லி கோட்டை முற்றிலும் சிதைந்து போய் சுற்று சுவர்கள் மட்டும் இருந்தது. விவசாயி ஒருவர் அந்த சுற்று சுவரை அகற்ற ஒரு டிராக்ட்ர் வைத்து சுற்று சுவரை இடித்து டிரக்ட்டரில் நிரப்பி வர ஓட்டுனரை பணித்தார். அந்த பணியை செய்ய கோட்டைக்குள் ட்ரக்ட்ர் உடன் சென்ற ஓட்டுநர் அந்த இடத்திலேயே மர்மமான முறையில் இறந்து போனார். அந்த ட்ராக்ட்டரை கூட பதினைந்து நாட்கள் கழித்தே அந்த இடத்தில இருந்து மீட்டனர்.




பகாசுரன் கதை :


பகாசுரன்

                                           
                                               பஞ்ச பாண்டவர்கள் ஆரண்ய (வன) வாசத்தில் இருந்த சமையம், அவர்கள் கானகத்தில் நெல்லிமலை பகுதியில் ஒரு சிறிய கிராமத்தில் தங்கியிருந்தனர். அந்த கிராம மக்களிடம் யாசகம் பெற்று பாண்டவர்கள் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இரவு பொழுதில் பாண்டவர்கள் தங்கியிருந்த வீட்டில் திரவுபதி மற்றும் பாண்டவர்கள் உரையாடி கொண்டிருந்த வேளையில், அந்த வீட்டுக்கு வெளியே ஒரு அந்தணர் அழும் குரல் பாண்டவர்களுக்கு கேட்டு அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.


                                           துக்கத்துடன் அழுதுகொண்டிருந்த அந்தணரை பார்த்து திரவுபதி, ஐயா உங்களுக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் அழுதுகொண்டு உள்ளீர்கள் என்று கேட்டாள். அந்தணரோ! தாயே நெல்லிமலையின் மறுபகுதியில் உள்ள நீலமலை என்னும் நீலகிரி மலையில் பகாசுரன் என்ற அரக்கன் கோட்டை கட்டி வாழ்ந்து வருகிறான். பகாசுரன் மனித இரத்தத்தை உண்ணும் வழக்கம் கொண்டவன். அவனுக்கு (பகாசுரன்) பசி எடுக்கும் போதெல்லாம் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து அகப்பட்ட மனிதர்கள், ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் விழுங்கிவிடுவான். பகாசுரனை கண்டு மக்கள் அஞ்சி நடுங்கினர். பகாசுரன் ஊருக்குள் வந்து உயிர்களை அழிப்பதை நிறுத்த அருகில் உள்ள அனைத்து கிராம மக்கள் ஒன்றுகூடி பகாசுரன் உடன் ஒப்பந்தம் செய்தனர். அந்த ஒப்பந்தத்தின் படி தினமும் ஒரு வீட்டில் இருந்து ஒரு ஆண் பகாசுரனுக்கு ஒருவண்டி உணவும், ஒரு ஜோடி எருமை மாடுகளும் பகாசுரன் இருப்பிடம் கொண்டு செல்ல வேண்டும். அப்படி கொண்டு சென்ற உணவு, எருமைமாடுகள், கொண்டு சென்ற ஆணையும் சேர்த்து விழுங்கிவிடுவான். அந்த முறையில் நாளை நான் பகாசுரனுக்கு உணவு கொண்டு செல்ல வேண்டும். அதனை நினைத்து தான் அழுகிறேன் என்று கூறினான்.


                                                கவலைப்பட வேண்டாம் அந்தணரே! நாளை உனக்கு பதிலாக என் மகன் பீமன் செல்வன் என்று சொல்லி அந்தணரை சமாதானம் செய்தாள். மறுநாள் பீமன் உணவு வண்டியுடன் பகாசுரன் கோட்டை நோக்கி பயணப்பட்டான். பகாசுரன் கோட்டையை அடைந்து வாசலில் நின்று, பகாசுர வெளியே வா என்று உரக்க கத்தினான். பகாசுரன் கோட்டையை விட்டு வெளியே வந்தவுடன் அவன் கண்முன்பே கொண்டுவந்த உணவினை பீமன் உண்ண தொடங்கினான். இதனை பார்த்து கொதித்த பகாசுரன் ஏய்! முட்டாள் மனிதனே என்னை பற்றி தெரிந்தும் எனக்கு கொண்டு வந்த உணவை என் கண் முன்னாலே உண்கிறாய். இதோ உன்னை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லி, அருகினில் இருந்த பெரிய மரத்தினை பிடுங்கி பீமனை அடித்தான். உணவினை உண்டு கொண்டு இருந்த பீமன் பகாசுரன் மரத்தால் அடிக்க வந்ததனை தனது இடது கையால் தடுத்தான். பின் பீமனும் மரங்களை பிடுங்கி பகாசுரனை தாக்கினான். இவர்கள் இருவரும் மோதியதில் அந்த காட்டினில் இருந்த அத்தனை மரங்களும் ஒன்றும் இல்லாது போனது. நீண்ட நேரம் நடந்த சண்டையின் முடிவில் பீமன் பகாசுரனை பூமியில் தள்ளி தனது கால் முட்டிகளால் பகாசுரனை தாக்கி அவனை கொன்றார். இந்த பகாசுரன் என்ற அரக்கனை பீமன் அழித்ததும் தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் அருளால் தான், அதனால் தான் தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் சன்னதிக்கு எதிரில் பீமன் மற்றும் பகாசுரன் ஆகிய இருவருக்கும் பிரமாண்ட சிலைகள் மக்கள் வழிபாட்டுக்காக அமைந்துள்ளது.

பீமன் பகாசுரன்

                                    
                                                     நமக்கு வாழ்வில் உண்டாகும் தடைகள், எதிரிகள், எதிர்ப்புகள், நோய்கள், கடன்கள், துன்பங்கள், செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் முதலிய மாந்திரீக பாதிப்புகள் நீங்க தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மனை முறையாக வழிபட்டு பயனடைய வாசகர்களை வாழ்த்துகிறோம்.

தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன்

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க