செய்வினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்வினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளை விரட்ட

                        


        "கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படக்கூடாது" என்பது முன்னோர் வாக்கு. ஒருவர் நல்ல செல்வ செழிப்புடன் வாழ்ந்தால் அவரை சுற்றி வாழும் சுற்றத்தார்க்கு மனதுக்குள் ஒரு பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கிவிடும். இதைத்தான் பொறாமை, பொல்லாப்பு, வயிற்றெரிச்சல் என்பர். இத்தகைய துர் எண்ணங்களோடு, பொறாமையோடு பிறர் நம்மை பார்ப்பதையே கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமல் என்று முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். தீங்கை உண்டாக்கும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமல் என்று பெயர். கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமலால் முகத்தில் கருஞ்சிவப்பாய் படர் தாமரை உண்டாக்கும், கண்திருஷ்டியினால் உடலில் வியாதிகள், சுகவீனம் உண்டாகும். குடும்பத்தில் மனநிம்மதியின்மை, வீண் குழப்பங்கள், சண்டை - சச்சரவுகள், தேவையற்ற வம்பு - வழக்குகள், தொழிலில் குழப்பங்கள், வியாபாரத்தில் நலிவு - நஷ்டங்கள் - கடன்கள் உண்டாகுதல் முதலிய துன்பங்கள் உண்டாகும். 


                                                  
                      ஏவல் பில்லி சூன்யம் செய்வதில்  பல வகைகள் முறைகள் உண்டு. வாசகர்களின் வேண்டுகோளுக்காக சில முறைகளை இங்கே தெளிவு படுத்துகிறேன்.

1. காலடி மண் :
                              ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஒரு நபருக்கு தீங்கினை விளைவிப்பதற்காக அந்த நபரின் காலடி மண்ணை எடுத்து அதில் அந்த நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபருடைய வீட்டு கூரையின் மீது வீசி எரியபடுவதகும். அப்படி அந்த மண்ணை வீசிவிட்டால் அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் அந்த மண் வீசப்பட்ட வீட்டில் குடியிருக்கும் அனைவரும் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் எழும். சிலர் வீட்டில் கற்களும் விழும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காலில் அரிப்பு புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும்.

2.சுடுகாட்டு சாம்பல் :
                                            ஏவல் பில்லி சூனிய வகையில் இரண்டாம் வகை தலைச்சான் பிள்ளையின் மண்டையோட்டு சாம்பலை எடுத்து அதில் ஏவல் சக்கரங்களை எழுதி சூன்யம் செய்ய வேண்டிய நபரின் பெயரை அந்த சக்கரத்தில் எழுதி மந்திர உருவேற்றி அவர்களின் வீடுகளில் போடுவதாகும்.  இதனால் அந்த வீட்டில் உள்ள நபர்களுக்குள் பகைமை விரோதம் உண்டாகி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் பிரிந்துபோவர்கள். இந்த சாம்பலை தின்பண்டங்களில் கலந்து கொடுத்தல் தீராத நோய்களை உண்டாக்கும்.

3.முட்டை :
                       ஏவல் பில்லி சூன்ய வகைகள் மூன்றாவது முறை ஒரு முட்டையை வைத்து ஏவல் செய்ய வேண்டிய நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அவர்களின் வீட்டு வாசலில் உடைத்து விடுவது. இதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பலவிதமான இன்னல்கள் உண்டாகும்.

4.எந்திர தகடு :
                             ஏவல் பில்லி சூன்ய வகைகளில் நான்காவது முறை  செம்புத் தகடில் ஏவல் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி சக்கரங்கள் வரைந்து மந்திர உருவேற்றி அடுப்பில் தீயிட்டு அந்த எந்திரத்தை எரித்து விடுவது. இதனால் ஏவல் செய்யப்பட்ட நபருக்கு உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகி தீராத துன்பத்தை அடைவான்.

5.சுண்ணாம்பு :
                              ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஐந்தாவது முறை சுண்ணாம்பு சிறிது எடுத்து பாட்டலில் அடைத்து இரவில் ஜன நடமாட்டம் இல்லாத சமயம் முச்சந்தியில் வைத்து மந்திர உருவேற்றி வைத்து, அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி இரண்டு வீட்டு சுவரிலும் பூசிவிடுவது. இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தீராத சண்டை சச்சரவுகள் உருவாகும்.

6.எலுமிச்சை :
                             ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஆறாவது முறையில் சில எலுமிச்சம் பழங்களை கொண்டுவந்து அதில் ஏவல் செய்ய வேண்டிய நபர்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபர்களின் வீட்டுக்குள் போட்டுவிடுவது அல்லது புதைத்து விடுவது. இதனால் அந்த வீட்டில் தீராத பிரச்சனைகளும் குழப்பங்களும் உண்டாகும்.

7. மந்திர பாவை (பொம்மை) :
                                                          ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஏழாவது முறை  சந்தன கட்டையால் ஓர் பொம்மை செய்து சரியாக அங்க அவயங்களை செதுக்கி கருப்பு, சிவப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்காரம் செய்து அந்த பொம்மையில் எதிரியின் பெயரை எழுதி மந்திர உருவேற்றி அந்த பாவையின் உடலில் சிறிய ஊசியால் குத்தி வைப்பது. இதனால் எதிரியின் உடலில் அந்த உறுப்பில் தீராத வலியும் வேதனையும் உண்டாகி துன்பப்படுவான்.

              ஏவல் பில்லி சூன்ய வகைகளில் இன்னும் மோகினியை வைத்து செய்வது, துர்தேவதைகளை வைத்து செய்வது, சாத்தானை வைத்து செய்வது என்று பல வகைகள் உண்டு. வாசக நல் உள்ளங்களே கெடுவான் கேடு நினைப்பான். எனவே யாருக்கும் கெடுதலை செய்யும் எண்ணமே வேண்டாம். ஏனென்றால் ஏவல் பில்லி சூன்யத்தால் பாதிக்க பட்டவன் அதனால் 12 வருடம் மட்டுமே துன்பப்படுவான். ஆனால் அதை செய்தவனும் அவன் பரம்பரையும் 98 வருடங்கள் துன்பப்பட வேண்டும். எனவே நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம்.

           மேலே கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளை பற்றி விரிவாக பார்த்தோம். கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளின் பாதிப்புகள் நீங்கி நம் இல்லங்களில் அமைதியும் மகிழ்ச்சியும், மனநிம்மதியும், லட்சுமிகடாச்சமும், அதிஷ்டமும் உண்டாக உபயோகிப்பீர் ''லக்ஷ்மி மூலிகை தூப பொடி''





         ''லக்ஷ்மி மூலிகை தூப பொடி'' நமது ''சர்வ சக்தி விருட்ச பீடம்'' - ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகளின் அற்புத  படைப்பாகும். அரியவகை மூலிகைகளை கொண்டு உருவாக்கப்பட்டது. அற்புத பலன் தருவது. உலகம் முழுவதும் விநியோகம் செய்ய வட்டம், மாவட்டம், மாநிலம், நாடுகள் வாரியாக ஏஜெண்டுகள்  தேவை. விநியோகம் செய்ய அணுகவும்  ''ஸ்ரீ விருட்ச பீடம்'' தொடர்புக்கு செல் : 85260 74891, 99440 99980.
      

வெள்ளி, 26 ஜூன், 2015

இரத்தக்காட்டேறி இரகசியம்



                                   
                                        இரத்தக்காட்டேறி இரகசியம்


                                   இன்றைய உலக மக்களுக்கெல்லாம் சகல கலைகளிலும் முன்னோடியாய் விளங்கியவன் தமிழன், ஆகாய விமானம் என்னவென்றே மனிதன் கண்டுபிடிக்கும் காலத்துக்கு முன்பே இந்திரனின் விமானத்தை பற்றியும், இராவணனின் புஷ்பக விமானத்தை பற்றியும் காவியங்களில் சொன்னவன் தமிழன், "கல் தோன்றி மண் தோன்ற காலத்தே முன்தோன்றிய மூத்த குடி" என்ற பெருமையை கொண்டவன் தமிழன், ஆதிகாலம் தொடக்கதிலிருந்தே சகல கலைகளிலும் பண்டைய தமிழர்கள் இந்த உலகினருக்கு முன்னோடிகளாய் திகழ்ந்தது உலகறிந்த உண்மை.


                                   சரித்திர காலங்களில் யுத்த நாட்களின் போது எதிரிகளின் பாசறைகளில் எதிரி பாசறைகளில் அம்புலியை (இரத்தக்காட்டேறி) ஏவி விட்டு எதிரிகளை கிலிகொள்ளவைத்தான் தமிழன். இப்போது என்ன செய்கிறான்? மலிவு விலையில் ஒரு நிலத்தை (காணியை) வாங்குவதற்கு இந்த அம்புலியை குறித்த நிலத்தில் (காணியில்) இரத்தகாட்டேரியாக அலையவிட்டு அந்த நிலத்தின் (காணியின்) விலையை அடிமாட்டு விலைக்கு வாங்க பயன்படுத்துகிறான்.


                   இந்த செய்வினைகளை விஞ்ஞான செயற்பாடுகளாக ஆரம்ப கால தமிழர்கள் , அதாவது இதன் கண்டுபிடிப்பாளர்களும் அவர்களது வழி வந்த சில சிஷ்ய கோடிகளும் மட்டுமே அறிந்து வைத்திருந்தார்கள். தொழில் ரகசியம், தொழில் பாதுகாப்பு போன்ற காரணங்களால் இதன் உண்மையான செயல்முறை ரகசியங்களை பின்வந்த தலைமுறைக்கு சொல்லித்தராத காரணத்தால் பின்னாளில் இது வெறும் அனுமானுஷ்ய சக்திகளின் வேலை என்று ஆகிப்போனது






                      சரி இப்போது செய்வினையின் செயல்முறைக்கு வருவோம், ஒரு செய்வினை உள்ளது, அதை வைத்துவிட்டால் , யாருக்கு செய்வினை வைக்கபடுகிறதோ அவனது வீட்டை சுற்றி பேய் நடமாட்டம் இருக்கும், அவனது வீட்டில் பேய் குடியிருக்கும். இந்த செய்வினையை - இரத்தக்காட்டேறியின் துணைகொண்டு இப்போது செய்துவருகிறார்கள்.


                                              இப்போது இரத்தகாட்டேறி என சொல்லப்பட்ட இந்த செய்வினையின் விஞ்ஞான பெயர் "அம்புலி". இந்த அம்புலி தான் மருவி இரத்தகாட்டேறி ஆகி இருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு.


                                  சரி இந்த அம்புலியை (இரத்தகாட்டேறியை) வசியப்படுத்தி செய்வினை செய்யும் வழிமுறையை பார்க்கலாம். இந்த எலுமிச்சை , சிறிது குங்கும், இரண்டு கோழிகள், நான்கைந்து பூசணிக்காய்கள். இவை அத்தனையும் ஒரு அக்கினி குண்டத்தின் முன்வைத்து மந்திரத்தினை 324 முறை உருவேற்ற வேண்டும்.



                                   இந்த உச்சாடனத்தை தொடர்ந்து 324 முறை ஓத வேண்டும். இவற்றை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே எலுமிச்சையை வெட்டி அதில் குங்குகுமத்தை தடவி தீயில் போடவேண்டும். பின்னர் பூசணிக்காயை வெட்டி அதில் ஏற்கனெவே வெட்டப்பட்டு கிடக்கும் கோழியின் இரத்தத்தை பூச வேண்டும். அதன் பின்னர் அந்த பூசணிக்காயை சிறிதாக வெட்டி அதில் விபூதி சேர்த்து அந்த விபூதியை எந்த குடும்பம் செய்வினை செய்ய வந்திருக்கிறதோ அந்த குடும்பத்தின் மேல் தூவ வேண்டும். இப்போது செய்வினை முடிந்தது. அந்த செய்வினை பூசணிக்காயை எதிரியின் வீட்டிலோ, அல்லது தோட்டத்திலோ, அல்லது சம்மந்தப்பட்ட எல்லையிலோ புதைத்து விட்டால் செய்வினை வேலை செய்ய தொடங்கி விடும். குறிப்பிட்ட இடத்தில் பேயின் நடமாட்டம் தொடங்கிவிடும்.


                                          அந்த குறிப்பிட இடத்தில் நாய் உருவில், பெண்ணின் உருவில், கிழவன் உருவில், கிழவி உருவில் பேய் நடமாடுவதை எதிரி வீட்டாரும் அந்த வழியால் கடந்து போவோரும் அல்லது அந்த இடத்துக்கு வருவோரும் காணத் தொடங்கி விடுவார்கள்.




                  இப்போது இந்த இரத்தகாட்டேறியின் (அம்புலி) எவுவதன் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அறியலாம். மேலே குறிப்பிட்ட அந்த செய்வினை மந்திரத்தை 324 முறை உச்சாடனம் செய்யும் போது வளிமண்டலத்தில் உள்ள காற்றலையில் எதிர்மறையான அழுத்தம் உண்டாகின்றது. இந்த எதிர் மறை அலைகளுக்கு இவ்வாறு உதாரணம் சொல்லலாம், சில இசைகளை கேட்கும் போது மனதுக்கு அமைதியும், சில இசைகளை கேட்கும் நம்மை அறியாமல் சங்கடம் மற்றும் துக்கம் தோன்றுவது இல்லையா? காரணம் அந்த இசை, காற்றலைகளில் எதிர் மறையான அலைகளை உண்டாக்குவது தான் . இந்த எதிர் அலைகள் காற்றில் கலக்கும் போது எலுமிச்சைகளை வெட்டி குங்குமத்தை தடவும் போது நிகழ்வது இதுதான். எலுமிச்சையில் அடிப்படையிலேயே இருக்கின்ற இரசாயணமும், குங்குமத்தில் இருக்கின்ற இரசாயணமும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நெருப்பில் போடும் போது அந்த வெப்பத்தின் விளைவால் இந்த கூட்டு ரசாயணம் எதிர்மறை அலைகளுடன் கலக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து உருவாகும் வலுவான எதிர்மறை காற்றலைகள்.

                          இப்போது பூசணிக்காய்க்கு வேலைவருகிறது, பூசணிக்காயில் இருக்கின்ற செல்கள் இந்த எதிர் மறை அலைகளை சிறைவைக்க சரியான சிறைகள். ஆனால் இந்த செல்களை திறப்பதற்கு கோழியின் இரத்தத்தில் இருக்கின்ற ஊக்கி கொஞ்சம் தாராளமாக தேவைப்படுகின்றது. எனவே தான் வெட்டிய கோழி இரத்தம் பூசணிக்காய் மேல் தடவப்படுகிறது. இந்த செயற்பாட்டின் பின்னர் அந்த வலுவான எதிரலைகள் அந்த பூசணிக்காயின் செல்களில் சிறைப்படுகின்றது. இந்த செயற்பாடு மின்சாரத்தை ட்ரான்ஸ்பார்மர்களில் அடைக்கும் செயற்பாட்டை ஒத்தது. அடைபட்டிருக்கும் சிறிய அளவு சக்தியும் வெளியேறுகையில் பெரும் சக்தியாக வெளிவரும்.


                               இப்போது செய்வினை வைப்பவனின் குடும்பத்தை பாதுகாக்க வேண்டுமே? அதுக்கு தான் விபூதி இருக்கிறதே! விபூதியில் இருகின்ற வேதிப் பொருள் இந்த எதிர்மறை அலைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த கூடியது. இதை அந்த குடும்பத்தின் மீது தெளிக்க அந்த எதிர்மறை அலைகளின் தாக்கம் அவர்களை விட்டு அகன்று விடுகிறது. இப்போது வலுவான எதிர்மறை அலைகளை சுமக்கின்ற இந்த பூசணிக்காயை எதிராளியின் வீட்டில் புதைத்ததும் இரத்தகாட்டேறியின் ஆட்டம் ஆரம்பமாகின்றது. இரத்தகாட்டேரி ஏவப்பட்ட குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் நாய் போலவும் , வெள்ளை உடையில் பெண் போலவும், கிழவி போலவும் தெரிய ஆரம்பிக்கின்றது. அது எப்படி என்று பார்க்கலாம், ஒவ்வொரு மனிதனுக்கும் அடிமனதில் பயம் இருக்கும். அது பேய், பிசாசு, பூதம், நாய், அல்லது பாட்டி கதைகளில் வரும் மோகினி, கிழவி எதுவாகவும் இருக்கலாம். இவர்களது அடிமனதில் இருக்கும் இந்த பயங்களை இந்த எதிமறை அலைகள் வெளியே உருவங்களாக நடமாட வைத்துவிடும், அடிமனது உருவங்களை கண்முன் உருவங்களாக கொண்டுவருவது தான் இந்த எதிர்மறை அலைகளின் பிரதான வேலை. இந்த எதிர்மறை அலைகளின் தாக்குதல் வட்டத்தில் அதிகநேரம் இருந்தால் இருதய வால்வுகளை வலுவிழக்க செய்யும், இதன் விளைவாக வாயிலும், மூக்கிலும் ரத்தம் வெளியேறி (இரத்தகாட்டேரி தாக்கி) மரணம் உண்டாகும். இப்போது புரிகிறதா செய்வினை - இரத்தகாட்டேரி ஒருவரை தாக்குவது எப்படி? என்று, இப்போது அடிமனதில் ஒரு கேள்வி? பகலில் அடங்கி இருக்கும் இரத்தகாட்டேரி இரவில் மட்டும் தாக்குவது எப்படி?



                                          இரவு என்றால் இயல்பாகவே அனைவருக்கும் பயம் இருக்கும். அதாவது இரவில் வெளியாகும் மீதேன் வாயுவுடன் இந்த எதிர்மறை அலைகள் சேரும் போது தான் செய்வினை - இரத்தகாட்டேரியின் தாக்கம் வலுப்பெறுகிறது. ஆகவே இந்த எதிர்மறை அலைகளை இரவில் வெளியாகும் மீதேனுடன் தாக்கமடைவது போல் சூத்திரம் வகுத்து இந்த "அம்புலியை" - இரத்தகாட்டேரியை இரவில் பயங்கரமாக அலைகின்ற இரத்தகாட்டேரியாக உருவாக்கினான். இது தான் இரத்தக்காட்டேறியின் விஞ்ஞான சூத்திரம். இவ்வாறு ஒவ்வொரு செய்வினைக்கும் பின்னால் ஒரு விஞ்ஞானம் மறைந்திருக்கிறது. செய்வினை செய்யும் மந்த்ரீகர்களே அறியாத சூட்சுமம் இதுவாகும்.

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க