தோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 மே, 2014

பிறப்பு திதி தோஷம்




                                              ஒரு குழந்தை பிறந்தால் அதனால் குடும்பத்தினருக்கு உண்டாகும் தீட்டு விபரங்களை முன்பே எழுதியுள்ளோம். இப்பொழுது ஒரு குழந்தை ஜனனமாகும் நாளில் இருக்கும் திதியால் உண்டாகும் ஜனனதோஷத்தை இங்கு பார்ப்போம்.

1.ஞாயறு - துவாதசி திதி, சப்தமி திதி.
2.திங்கள் - ஏகாதசி திதி, சஷ்டி திதி.
3.செவ்வாய் - பஞ்சமி திதி, சப்தமி திதி.
4.புதன் - துதியை திதி, அஷ்டமி திதி.
5.வியாழன் - சஷ்டி திதி, நவமி திதி.
6.வெள்ளி - அஷ்டமி திதி, தசமி திதி.
7.சனி - நவமி திதி, ஏகாதசி திதி.
                    
                          நீங்கள் மேற்கூறிய நாளும், திதியும் கூடிய நாளில் பிறந்திருந்தால் இது பிறப்பு திதி தோஷமாகும். இதனால் உங்கள் வாழ்வில் பல இன்னல்களை நீங்கள் அடைவீர்கள். அந்த துன்பங்களை நீக்க சரியான பரிகாரங்களை செய்யவேண்டியது அவசியம்.

திங்கள், 25 நவம்பர், 2013

தோஷங்கள் உண்டாக காரணங்கள்


                    



                     தோஷங்கள் உண்டாக காரணங்கள் என்ற இந்த கட்டுரையில் ஒரு மனிதனுக்கு ஜாதக ரீதியாக தோஷங்கள் எப்படி உண்டாகிறது என்பதை பற்றி விரிவாக காணலாம்.

              நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களின் சாரத்தை பெற்று நாம் பிறக்கிறோம். இந்த வினைப்பதிவை தானும் தனது வம்சாவழியினரும்  அனுபவித்தே தீரவேண்டும். இந்த கர்மப் பலனில் நன்மையையும் இருக்கும், தீமையும் இருக்கும், இந்த வினைப்பதிவின் சாரமே சஞ்சித கர்மா.

                 இப்பிறப்பில் வாழும் காலத்தில் ஏற்று செய்யும் தொழிலின்                        ( கர்மத்தின் ) பால் நாம் பிறருக்கு செய்யும் நன்மை, தீமைகளை  குறிப்பது பிராப்த கர்மா.

                   மனிதன் புற இச்சைகளில் மயங்கி தன் ஐம்புலன்களால் தொடர்ந்து செய்து வரும் காரியங்களின் வினைப்பதிவு ஆகாமிய  கர்மா.

               கருவமைப்பின் வழி வந்த வினைப்பதிவு சஞ்சிதமாம் 
               உருவெடுத்தபின் கொண்ட வினைப்பதிவு பிராப்தம் 
               இருவகையும் கூடி எழும் புகுவினையே ஆகாமியம் 
               ஒருவினையும் வீண் போக உள்ளடங்கி பின் விளைவாம்.
                                                                          -யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி 
               
     தோஷங்கள் உண்டாக காரணங்கள் இந்த மூன்று வகையான கர்மாக்கள்  ஆகும். அவை 1. சஞ்சித கர்மா, 2.பிராப்த கர்மா, 3.ஆகாமிய கர்மா. கருவின் வழியில் வரும் சஞ்சித கர்மாவும், உடலெடுத்த பின் தொழிலால் வரும் பிராப்த கர்மாவும், இவ்விரண்டும் சேர்ந்து செயலாற்றும் போது விளையும் ஆகாமிய கர்மாவும், இவ்வகையில் மூன்றும் தோன்றியபின் அந்த கர்மாக்களின்  பலனால் ஜாதகருக்கு நன்மை - தீமைகள் நடைபெறும்.

   இந்த மூன்று கர்மாக்களால் விளையும் நற்பலன்களை ஜாதகத்தில் யோகமென்றும், தீய பலன்களை ஜாதகத்தில் தோஷம் என்றும் வகைப் படுத்துகிறோம்.


தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க