நல்லதொரு பூச நட்சத்திரத்தில் சந்தன மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புல்லுருவிக்கு மஞ்சள் நூல் காப்புகட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பொங்கல் இட்டு திரும்பி வந்து அடுத்த நாள் காலையில் சென்று தூப தீபம் காட்டி வெள்ளை சாவல் பலி கொடுத்து இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்கள், நகங்கள் பத்தும் படாமலும் எடுத்துவந்து சாறு பிழிந்து மண் சட்டியில் தடவி காயவைத்து, அதன்பின் சந்தன வில்லையை பொன்ணாங்கண்ணி சாறு விட்டு குழைத்து மண் சட்டியில் பூசி காயவைத்து , அதன் மேல் புத்துதேனை பூசி , கற்பூரம் ஏற்றி புகையை மண்சட்டியில் பிடித்து சட்டியில் உள்ள மையை வழித்து டப்பாவில் பத்திரபடுத்தவும். வெளியில் செல்லும் போது வினாயகரை மனமாற வேண்டி பொட்டிட்டு கொண்டு போக தேவர் முதல் மனிதர்வரை அனைவரும் வசியமாவார்கள்.
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கினையும் நன்கறிந்து மக்கள் நலம்பெற சுவடிகளாக்கி உலக மக்கள் நலம்பெற வழிவகை செய்தவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர்களின் வழியினை மக்களுக்கு பறைசாற்றுவதே இந்த தளம்.
சர்வ வசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சர்வ வசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 3 ஜூன், 2013
ஞாயிறு, 2 ஜூன், 2013
வசிய திலகம் செய்முறை
வசிய திலகம் செய்ய ஏரழிஞ்சல் விதையை கற்பூரம் சேர்த்து அரைத்து பீங்கான் ஜாடியில் போட்டு
சூரிய ஒளியில் வைத்தால் அதிலிருந்து தைலம் இறங்கும் (வசிய திலகம்) அதை எடுத்து தாமிர
டப்பாவில் பத்திரப்படுத்தி வைத்து கொள்ளவும். பின் ஞாயற்றுக்கிழமை அன்று
ஒரு பலகையின் மீது சிவப்பு பட்டு துணி விரித்து அதன் மேல் வசிய திலகம் உள்ள தாமிர டப்பாவை
வைத்து காரம்பசு (கருப்பு நிற பசு) நெய்யில் தாமரை நூல் திரிபேட்டு தீபம்
ஏற்றி கிழக்கு திசை நோக்கி அமர்ந்துகொண்டு "ஓம் ஆம் ஜெய ஜெய வா வா அவ்வும்
உவ்வும் வசிய வசிய சுவாஹா" என்ற வசிய மந்திரத்தை 1008 ஜெபம் செய்து,
"யநமசிவ" என்ற மந்திரம் 1008 உரு சொல்ல மேற்படி தைலம் (வசிய திலகம்) வசியமாகும்.
அதன்பின் வசிய திலகம் இட்டு செல்ல சகல விதமான காரியங்களும் கைகூடும்.
செவ்வாய், 21 மே, 2013
சர்வ வசிய மை செய்முறை
சர்வ வசிய மை செய்முறை :
வெள்ளை குண்டுமணி வேர், வெள்ளை விஷ்ணுகிரந்தி வேர், வெள்ளெருக்கன் வேர், பெரியாநங்கை வேர், வெள்ளை காக்கணம் வேர், வெண்கொழிஞ்சி வேர் இவைகளை சம எடையாக ஒரு புத்தம் புதிய சட்டியில் போட்டு கருக்கி அத்துடன் பச்சை கற்பூரம், கஸ்தூரி, புனுகு வகைக்கு ஒரு குண்டுமணி எடை கூட்டி கல்வத்தில் போட்டு புற்று தேன் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து கொம்பு டப்பாவில் பத்திரப்படுத்தவும்.
இந்த சர்வ வசிய மையை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு "ஓம் ஸ்ரீம் க்லீம் குமாரிகே ஜெகன் மோகினி த்ரிலோக்யம் வஸ்மாந்த் க்ரீம் ஸ்ரீம் ஸ்வாஹா' - என்ற வசிய மந்திரத்தை 1008 முறை ஜெபிக்க சர்வ வசிய மை உயிர் பெறும்.
சர்வ வசிய மையின் பலன் :
சர்வ வசிய மையை திலகமிட சத்ரு வசியம் (எதிரிகள் வசியம்), பொது ஜன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம், இலட்சுமி கடாச்சம் உண்டாகும். சர்வ வசிய மை உயிரேற்ற வைக்க வேண்டிய நிவேதனம் : பால், பழம், கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலை பாக்கு, தேங்காய், சர்கரை பொங்கல்.
சர்வ வசியம் தரும் இரசமணி
முறைப்படி கன்னிநூல் கப்புகட்டி, சாபநிவர்த்தி செய்து கொண்டுவந்த ஜோதிப்புல்லை கல்வத்தில் போட்டு மைப்போல் அரைத்து வைத்துக்கொள்ளவும், சுத்தி செய்து சட்டை கசடு நீக்கிய பாதரசம் ஒரு பலம் எடுத்துக்கொண்டு அரைத்த ஜோதிப்புல் விழுதில் உள்ளே வைத்து, களிமண் சீலை செய்து பத்து எருவில் (பசும் சாணத்தில் செய்த வரட்டி) புடம் போட்டு, புடம் ஆறிய பின் எடுத்தால் பாதரசம் கெட்டிப்பட்டு கல் போல் இருக்கும். இதற்கு மேல் மீண்டும் ஜோதிப்புல் அரைத்த விழுதில் உள்ளே வைத்து மண்சீலை செய்து பத்து எருவில் புடம் போடவும், புடம் ஆறிய பின் எடுத்து மீண்டும் இருபது முறை இதே முறையில் புடம் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். இவ்வாரு முறைப்படி செய்த பாதரசத்தை குகையில் வைத்து ஊத உருகி மணியாக கட்டும். இந்த மணியை பால் தேன் இவைகளில் போட்டால் அதை உறிஞ்சி குடிக்கும். இந்த மணியை வாயில் போட்டுக்கொண்டு உமிழ்நீரை விழுங்க விந்து கட்டும், உடலுறவில் லேசில் விந்து வெளிப்படாது, உடலில் உள்ள தாதுக்கள் கட்டும். நரை, திரை மாறி உடல் காயசித்தி ஆகும்.
இத்தகைய இரசமணியை வசிய மந்திரம் லட்சம் உரு ஏற்றி பயன்படுத்தினால் சர்வ ஜன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம் முதலிய வசியங்கள் உண்டாகும், இந்த இரசமணியால் லட்சுமி கடாச்சம் உண்டாகும். இந்த இரசமணியை பால் கரக்கும் போது பசுவின் மூக்கில் வைத்தால் பால் சுரக்காது. இந்த இரசமணியை இடுப்பில் கட்டி பெண்ணை புணர்ந்தால் விந்து வெளிவராது தம்பனம் ஆகும், போகசக்தி அதிகரிக்கும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க
தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க
-
சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம...