வியாபார வசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாபார வசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

தன் வசிய எந்திரமும் நத்தைசூரியும்






                                    
                          இதுவரை பலரும் சொல்லி வருவது தன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம், லட்சுமி வசியம், குபேர வசியம் எனும் முறைகளை தான் இந்த முறைகள் மூலம் பொரும் தனத்தை அடைந்தவர்கள், வியாபாரத்தில் பெரும் வெற்றிகளை குவித்தவர்கள், தொழிலில் மிகப் பெரிய பேரும் புகழும் செல்வமும் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்றால் ஒரு சிலரே. ஏனென்றால் தனக்கு பிரபஞ்ச  சக்திகள் வசியமாகி செயல்படாத போது, இந்த வசிய முறைகளை யார் பயன்படுத்தினாலும் வெற்றி தராது.
        
              ஆனால் பழமையான சித்தர் முறைகளில் நான் கண்டெடுத்து அனுபவத்தில் பலருக்கும் செய்துகொடுத்து பயனடைய செய்து பேரும், புகழும், பெரும் பண வசதிகளையும் அடைய வைத்த இன்று வரையில் யாரிடமும் உலகில் இல்லாத ஒரு முறைதான் தன்வசிய எந்திரம். இத்துடன் சஞ்சீவி மூலிகைகளில் ஒன்றான நத்தைசூரி வைத்து எந்திரம் தயாரிக்கிறோம். எத்தைச் சொன்னாலும் அத்தை செய்யும் நத்தைசூரி என்பது சித்தர்வாக்கு.
           
                      இந்த தன் வசிய எந்திரத்தை அணிவதன் மூலம் மிக குறுகிய காலத்தில் உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் பேரும் புகழும் பெற்று மிகப் பெரும் தன வசதிகளை அடையச்செய்யும்,  இதனை அணிபவர்கள் பெற முடியாத பலன்கள் ஏதுமில்லை. தன் வசிய எந்திரத்தை தங்க தகட்டில் எழுதுவது அதிகமான பலன்தரும் . 


சிவப்பு நத்தைசூரி :



செவ்வாய், 21 மே, 2013

சர்வ வசிய மை செய்முறை

                                               



சர்வ வசிய மை செய்முறை :
                                                                வெள்ளை குண்டுமணி வேர், வெள்ளை விஷ்ணுகிரந்தி வேர்,  வெள்ளெருக்கன் வேர், பெரியாநங்கை வேர், வெள்ளை காக்கணம் வேர், வெண்கொழிஞ்சி வேர் இவைகளை சம எடையாக ஒரு புத்தம் புதிய சட்டியில் போட்டு கருக்கி அத்துடன் பச்சை கற்பூரம், கஸ்தூரி, புனுகு வகைக்கு ஒரு குண்டுமணி எடை கூட்டி கல்வத்தில் போட்டு புற்று தேன் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து கொம்பு டப்பாவில் பத்திரப்படுத்தவும்.

                      இந்த சர்வ வசிய மையை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு "ஓம் ஸ்ரீம் க்லீம் குமாரிகே ஜெகன் மோகினி த்ரிலோக்யம் வஸ்மாந்த் க்ரீம் ஸ்ரீம் ஸ்வாஹா' - என்ற வசிய மந்திரத்தை 1008 முறை ஜெபிக்க சர்வ வசிய மை உயிர் பெறும்.
          

       



சர்வ வசிய மையின் பலன் :



                                                       சர்வ வசிய மையை திலகமிட சத்ரு வசியம் (எதிரிகள் வசியம்), பொது ஜன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம், இலட்சுமி கடாச்சம் உண்டாகும். சர்வ வசிய மை உயிரேற்ற வைக்க வேண்டிய நிவேதனம் : பால், பழம், கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலை பாக்கு, தேங்காய், சர்கரை பொங்கல். 


தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க