அழுகண்ணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழுகண்ணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 மே, 2014

அற்புத வசிய மூலிகை அழுகண்ணி தொழுகண்ணி



அழுகண்ணி மூலிகைக்கு வடமொழியில் சாவல்யகரணி என்றும் தொழுகண்ணிக்கு சல்லிய கரணி என்றும் பெயர் இம்மூலிகைகள் இரண்டும் காயகற்ப மூலிகைகள் ஆகும். மிகப்பெரியதொரு வசிய மூலிகைகள் உண்டு என்று சொன்னால் அவை அழுகண்ணி மற்றும் தொழுகண்ணி ஆகும்.

        அழுகண்ணி ஒரு அடி நீளம் வளரும் ஒரு குத்து செடியாகும்.இதன் இலை தடிமனாகவும் வழுவழுப்பாக கடலை இலையினை போல் இருக்கும். இந்த இலையின் நுனியில் இருந்து பனித்துளி போல் நீர் கசிந்து பூமியில் கொட்டும், எனவே இந்த செடிக்கு அடியில் பூமியில் இரப்பதம் இருக்கும். இந்த நீர் இனிப்பு சுவை உடையதால் எப்போதும் எறும்பு மொய்துக்கொண்டே இருக்கும். இது ஒரு ஜீவ சக்தி உடைய மூலிகை, இதனை முறைப்படி காப்பு கட்டி சாபம் நீக்கி இந்த மூலிகையை எடுத்து உபயோகப்படுத்த வேண்டும். அழுகண்ணியின் வடக்கு போகும் வேரை எடுத்து தங்கம் அல்லது வெள்ளியில் காப்பு அல்லது தாயத்து செய்து அதனுள் வேரை வைத்து வலது கரத்தில் அணிந்து கொண்டால் சகல காரியங்களும் வெற்றியாகும், லக்ஷ்மி தேவி நமக்கு வசியமாகி லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும், தொழில் வியாபாரங்களில் மிகப் பெரிய முன்னேற்றம் உண்டாகும்.

            தொழுகண்ணி இலை பார்ப்பதற்கு சனப்ப இலை போல இருக்கும், இதை தொட்ட உடன் பக்க இலையுடன் இலை சேர்ந்து கைகூப்புவது போல் இருக்கும், ஒரு முழ நீளம் வரை வளரும், அந்தி மல்லி செடியின் தோற்றத்தை ஒத்து இருக்கும். தொழுகண்ணியின் வடக்கே போகும் வேரை எடுத்து தங்கம் அல்லது வெள்ளியில் காப்பு அல்லது தாயத்து செய்து அதனுள் வேரை வைத்து வலது கரத்தில் அணிந்து கொண்டால் சகல ஜன வசியம், சகல காரிய வெற்றி, குபேர அந்தஸ்து லக்ஷ்மி கடாட்சம் உண்டாக்கும்.

     இவ்விரு காயகற்ப மூலிகைகளை முறைப்படி உண்டுவந்தால் உடலில் வெட்டுப்பட்ட பாகங்களை உடனே இணைக்கும் என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.


தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க