மனித வசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனித வசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஜூன், 2013

சகல ஜீவராசிகளை வசியம் செய்ய

           

                      கள்ளி காக்கை (செம்போத்து பறவை) ஒன்றை பிடித்து ஓடுகின்ற ஆற்று நீரில் போய் அமந்து அதன் முடியை ஒவ்வொன்றாக பிடுங்கி நீரில் போட அதில் எந்த முடி தண்ணீரை எதிர்த்து வருகிறதோ அதை எடுத்து பத்திரப்படுத்தவும். அந்த முடியை தங்கத்தில் தாயத்து செய்து அதில் அடைத்து கட்டிக்கொள்ள சகல ஜீவராசிகளும்  வசியமாகும்.
             இதற்கு வசிய மந்திரம்  ''ஓம் ஆம் ஜெய ஜெய வா வா அவ்வும் உவ்வும் சவ்வும் வசிய வசிய சுவாஹா'' என்று 1008 உரு ஏற்றவும்.
             இந்த வசியத்தை தவறாக தெரிந்துள்ள பலரும் செம்போத்து கூட்டில் ஒரு வேர் இருக்குமென்றும் அது தண்ணீரை எதிர்த்து செல்லும் அதுவே வசியத்திற்கு உதவும் என்று தவறாக எண்ணம் கொண்டுள்ளனர். அது தவறு குயிலை போலவே செம்போத்தும் கூடு கட்டி வாழ்வதில்லை என அறிக.
            

திங்கள், 3 ஜூன், 2013

மனிதர் முதல் தெய்வம் வரை வசியம் செய்ய



நல்லதொரு பூச நட்சத்திரத்தில் சந்தன மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புல்லுருவிக்கு மஞ்சள் நூல் காப்புகட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பொங்கல் இட்டு திரும்பி வந்து அடுத்த நாள் காலையில்  சென்று தூப தீபம் காட்டி வெள்ளை சாவல் பலி கொடுத்து இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்கள், நகங்கள் பத்தும் படாமலும் எடுத்துவந்து சாறு பிழிந்து மண் சட்டியில் தடவி காயவைத்து,  அதன்பின் சந்தன வில்லையை பொன்ணாங்கண்ணி சாறு விட்டு குழைத்து மண் சட்டியில் பூசி காயவைத்து , அதன் மேல் புத்துதேனை பூசி , கற்பூரம் ஏற்றி புகையை மண்சட்டியில் பிடித்து சட்டியில் உள்ள மையை வழித்து டப்பாவில் பத்திரபடுத்தவும். வெளியில் செல்லும் போது வினாயகரை மனமாற வேண்டி பொட்டிட்டு கொண்டு போக தேவர் முதல் மனிதர்வரை அனைவரும் வசியமாவார்கள்.

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க