சனி, 21 மார்ச், 2015

செல்வவளம் பெருகி நிலைக்க

                                           செல்வவளம் பெருகி நிலைக்க
                                                  இன்றைய வாழ்க்கை சூழலில் செல்வத்தினை சேர்க்க போராடும் மனிதர்களே நாம் அனைவரும், செல்வத்தினை தேடி ஓடாத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை, திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. நாமும் செல்வத்தினை சேர்க்க அரும்பாடு படுகிறோம், செல்வத்தினை சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே விளங்குகிறது. அந்த நிலையினை மாற்றவே சில எளிய செல்வவளம் பெருகி நிலைக்க தாந்த்ரீக முறைகளை இங்கே தெளிவுபடுத்துகிறேன்.
1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.

2. செல்வவளம் பெருகி நிலைக்க பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும். ( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).

3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.

4. செல்வவளம் பெருகி நிலைக்க ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).

5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.

6. செல்வவளம் பெருகி நிலைக்க எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு "ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி" என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.

7. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.

8. செல்வவளம் பெருகி நிலைக்க மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.

9.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.

10. செல்வவளம் பெருகி நிலைக்க பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.

11. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.

12. செல்வவளம் பெருகி நிலைக்க குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.

13. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.

14. செல்வவளம் பெருகி நிலைக்க கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.

15. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.

16. செல்வவளம் பெருகி நிலைக்க வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.

17. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.

18. செல்வவளம் பெருகி நிலைக்க சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.











திங்கள், 16 மார்ச், 2015

பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள்

                 பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள்



                                                               ஒவ்வொரு மனிதனும் பூமியில் ஜனனம் ஆகும் காலத்தின் அடிப்படையில் அவன் எந்த நட்சத்திர ஆதிக்கத்தில் பிறக்கிறான். அந்த நட்சத்திரம் எந்த இராசியில் அமைகிறது என்பதை பொறுத்து அந்த மனிதனின் குண நலன்களும், புத்தி சாதுர்யமும், உடல் அமைப்பும், செயல் ஆற்றும் திறனும், மற்றும் அந்த மனிதனின் விதி அமைப்பும் அதனால் வாழ்வில் அவன் அடையும் இன்ப துன்பங்களும் கணக்கிடப்படுகின்றன.


                                                          இன்று பலரும் வாழ்வில் இன்னல்களை அனுபவித்துக் கொண்டு, அந்த துன்பத்தை தாங்க முடியாமல் பல தெய்வீக திருத்தலங்கள் சென்று வழிபடுவதும், பரிகாரங்கள் செய்து கொள்வதும் நாம் அன்றாடம் காணும் ஒரு நிகழ்வாகும். அப்படி வழிபாடும் பரிகாரங்களும் செய்தும் பலனின்றி புலம்பி தவிப்பவர்கள் ஏராளம். இந்த நிலை மாறவே ஒரு எளிய பரிகார முறையை ( பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் ) இங்கே தெளிவுபடுத்த இருக்கிறேன்.


                                               மனித சமுதாயம் இன்புற்று வாழ்வதற்காகவே தம்மையும் தம்வாழ்வையும் அற்பணித்து கொண்டவர்கள் சித்தர்கள். தெய்வங்களுக்கு அடுத்தபடியாக நாம் போற்றித் தொழுவது சித்தர்களையே ஏனென்றால் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற படிநிலையை முன்னோர்கள் சொல்லி சென்றுள்ளனர். அதன்படி பார்த்தோம் என்றால் முதலில் நம்மை பெற்றெடுத்து பூமியில் அறிமுகபடுத்தியது தாய், இரண்டாவதாக நம்மை காத்து உலக அறிவையும், நல்ல கல்வியையும் பெற செய்வது தந்தை, முன்றாவதாக நல்ல கல்வியையும், அறிவையும், ஞானத்தையும், மோட்சத்தையும் நாம் அடைய வழிகாட்டுவது குரு (ஆசிரியர்கள், குருமார்கள்,சித்தர்கள்,ஞானிகள்,யோகிகள்) இவர்களின் வழிகாட்டுதலின் படியே, இவர்களின் ஆசி அனுகிரகம் பெற்றே நாம் நான்காம் நிலையில் உள்ள தெய்வத்தை அடைய முடியும்.


                                                          எனவே பல வழிபாடுகள் செய்து, பல பரிகாரங்கள் செய்து தெய்வத்தின் அனுகிரகத்தினை பெறுவது சற்று கடினமான காரியமே, ஆனால் நமக்காகவே வாழ்ந்து நமக்காகவே இன்றும் அரூபமாய் சூட்சுமமாய் வாழ்ந்துகொண்டு அருள்பாலித்துக் கொண்டிருப்பவர்கள் சித்தர்களே இவர்களின் அருளை பெறுவது மிகவும் எளிமையானது. உங்கள் பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் ஜெபம் செய்து வருவதும், அந்த சித்தர்கள் ஜீவசமாதி ஆன தலங்களுக்கு சென்று பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் சொல்லி வழிபட்டு வருவதும் நம் வாழ்வில் வரும் துன்பங்களை போக்கி, நம் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கீழே உங்களின் பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது அந்த மந்திரங்களை ஜெபம் செய்து பலன் அடைவீர்களாக.


பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் :



1. அஸ்வினி நட்சத்திரம் - மேஷ இராசி :
                                  ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ போகர் மகரிஷியே நம :


2. பரணி நட்சத்திரம் - மேஷ இராசி :
                  ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங் ஹ்ரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம :


3. கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் - மேஷ இராசி :
                                                    ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ போகரிஷியே நம :



4. கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் - ரிஷப இராசி :
                                                        ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங் ஸ்ரீ மச்சமுனிவரே நம :


5. ரோகிணி நட்சத்திரம் - ரிஷப இராசி :
                                                                 ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே நம :


6. மிருகசீரிடம் நட்சத்திரம் 1ம் பாதம் - ரிஷப இராசி :
                                                               ஓம் ஸ்ரீம் ருங் குருங் ஸ்ரீ மச்ச முனிவரே நம :


7. மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதம் - ரிஷப இராசி :
                                                                    ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ சட்டை நாதரே நம :


8. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் - ரிஷப இராசி :
                                           ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :



9. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் - ரிஷப இராசி :
                                                                 ஸ்ரீம் றம் ஹ்ரீங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :



10. திருவாதிரை நட்சத்திரம் - மிதுன இராசி :
                                                 ஸ்ரீம் குரு - துரு - குரு - வசி ஸ்ரீ திருமூலதேவரே நம :


11. புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் - மிதுன இராசி :
                                                 ஸ்ரீம் ஸம் அம் உம் - ஜீம் ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம :


12. புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் - கடக இராசி :
                                                  ஸ்ரீ தம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் நம :


13. பூசம் - நட்சத்திரம் கடக இராசி :
                                                 ஓம் ஸ்ரீம் - குங் -குருங் குரிங் -ஸ்ரீ கமலமுனியே நம :


14. ஆயில்யம் நட்சத்திரம் - கடக இராசி :
                                              ஓம் ஸ்ரீம் ம் -அம் - உம் ஸ்ரீ அகத்தியப் பெருமானே நம :


15. மகம் நட்சத்திரம் - சிம்ம இராசி :
                                                         ஓம் ஹம் - ஸம் - ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :


16. பூரம் நட்சத்திரம் - சிம்ம இராசி :
                                       ஓம் ஸ்ரீம் - ஸ்ரீம் -ஸ்ரீம் ஹ்ரீம் - ஹ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :


17. உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் - சிம்ம இராசி :
                                                             ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் -றீம் - ஸ்ரீ இராம தேவரே நம :


18. உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் - கன்னி இராசி :
                                                            ஓம் ஐம் கிளீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :


19. உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம் - கன்னி இராசி :
                                                                             ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் கருவூராரே நம :


20. உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம் - கன்னி இராசி :
                                          ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீயும் கருவூர் சித்தரே நம :


21. அஸ்தம் நட்சத்திரம் - கன்னி இராசி :
                                                        ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கரூர்தேவ நம :

22. சித்திரை நட்சத்திரம் 1,2ம் பாதம் - கன்னி இராசி :
                                                            ஸ்ரீம் ஸம் அம் ஐம் க்ளீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :


23. சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதம் - துலாம் இராசி :
                                   ஸ்ரீம் -ஹ்ரீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :


24. சுவாதி நட்சத்திரம் - துலாம் இராசி :
                                                              ஓம் க்ளீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :


25. விசாகம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் - துலாம் இராசி :
                                          ஓம் ஸ்ரீம் ருங் அங் சிங் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :



26. விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் - விருச்சிக இராசி :
                                            ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :


27. அனுஷம் நட்சத்திரம் - விருச்சிக இராசி :
                                                           ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :



28. கேட்டை நட்சத்திரம் - விருச்சிக இராசி :
                                                                            ஓம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் வான்மீகரே நம :


29. மூலம் நட்சத்திரம் - தனுசு இராசி :
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ராங் ருங் - குருங் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே நம :


30. பூராடம் நட்சத்திரம் - தனுசு இராசி :
                          ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ பதஞ்சலி மமுனிவரே நம :


31. உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதம் - தனுசு இராசி :
                   ஓம் ஸ்ரீம் க்ளீம் ஐம் ஸம் அம் ஓம் ஜூம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :


32. உத்திராடம் நட்சத்திரம் 2,3,4ம் பாதம் - மகர இராசி :
                          ஓம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :


33. திருவோணம் நட்சத்திரம் - மகர இராசி :
                ஓம் ஐம் சௌம் க்ளீம் ஹம் ஸ்ரீம் றம் டம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :


34. அவிட்டம் நட்சத்திரம் 1,2ம் பாதம் - மகர இராசி :
                             ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :


35. அவிட்டம் நட்சத்திரம் 3,4ம் பாதம் - கும்ப இராசி :
                                                             ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ திருமூலரே நம :


36. சதயம் நட்சத்திரம் - கும்ப இராசி :
                 ஓம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ருங் ஸ்ரீம் ஸம் ஸ்ரீ சட்டைநாதரே நம :


37. பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3ம் பாதம் - கும்ப இராசி :
                        ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கமலமுனிவரே நம :


38. பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம் - மீன இராசி :
ஓம் க்ளீம் ஐம் சௌம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ சிவப்பிரபாகர சித்தயோகி பாம்பாட்டி சித்தரே நம :


39. உத்திரட்டாதி நட்சத்திரம் - மீன இராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம :


40. ரேவதி நட்சத்திரம் - மீன இராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் ஜீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம :







திங்கள், 23 பிப்ரவரி, 2015

மூல நோயிக்கு அற்புத மருந்து

                                      
                                                           மூல நோய்


                                                    மனிதனுக்கு உண்டாகக் கூடிய பலவகையான நோய்களில் மூல நோய் ஒன்றாகும். சரியாக சிகிச்சை மேற்கொள்ளாமல் விடப்படும் மூல நோய் - புற்று நோயாக மாறும் வாய்ப்புகள் அதிகம். ஆசன வாய் பகுதியில் உள்ள இரத்தக் குழாய்கள் தடிமன் ஆவது தான் மூல நோய்.



மூல நோய் - அறிகுறிகள் :


1. ஆசன வாயில் ( மலம் வெளியேறும் பாதையில் ) அரிப்பு உண்டாகுதல்.

2. மலசிக்கல் ஏற்படுதல், மலத்துடன் இரத்தம் கலந்து வெளியேறுதல்,

3. ஆசனவாயில் தொடர்ந்து உண்டாகும் வலி, எரிச்சல், அரிப்பு.

4.ஆசன வாயின் உள்பகுதி வீங்கி, மலம் கழிக்க சிரமப்படுதல் (உள் மூலம்).

5. ஆசன வாயின் வெளிப்பகுதியில் முளை போல் சதை வீங்கி தள்ளி உட்கார, படுக்க, மலம் கழிக்க முடியாத அளவுக்கு வலி, வேதனை சிரமத்தை உண்டாக்குதல். ( இதுவே வெளி மூலம் ஆகும் ).

6. மலவாய் எரிச்சல், விந்து கெடுதல், வயிற்று இரைச்சல், வயிறு நொந்து மலம் கழிதல், பசியின்மை, புளி ஏப்பம், நீர் வேட்கை, உடல் மெலிதல், உடல் பலம் குறைதல்,

7. மூல நோயானது மன ரீதியாகவும் பாதிப்படைய செய்யும், மனம் தளரும், நம்மை எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ள செய்யும்.




மூல நோய் - உண்டாக காரணங்கள் :


1. தொடர்ந்து உண்டாகும் மலசிக்கல்,

2. உடல் எடை ( தொந்தி ) யால் ஏற்படும் வயிற்று அழுத்தம்,

3. பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கரு வளர்ச்சியால் உண்டாகும் வயிற்று அழுத்தம்,

4. பரம்பரை மற்றும் அதிக உடல் உஷ்ணம்,

5. கிழங்கு வகைகள் ( கருணை கிழங்கு தவிர ), மாமிச உணவுகள், உணவில் அதிகப்படியான காரம் சேர்த்து உண்பதாலும்,

6. தொடர்ந்து உட்கார்ந்தபடி வேலை செய்பவர்களுக்கு, 

7. வேளைக்கு உணவு உட்கொள்ளாமல் ( பட்டினி ) இருப்பதால் மூலாதாரத்தில் வெப்பம் அதிகமாவதால்,



                                             இன்றைய ஆங்கில மருத்துவத்தில் மூல நோயிக்கு அறுவை சிகிச்சை (ஆபரேசன் ) ஒன்று தான் தீர்வாக உள்ளது, அப்படியே அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் மீண்டும் மீண்டும் மூல நோய் வந்து நம்மை தீராத துன்பத்தில் ஆழ்த்துகிறது என்பதே உண்மை, இந்த முறையில் அறுவை சிகிச்சை ஒரு முறை செய்ய ஆகும் செலவு ஏறத்தாழ ரூபாய் 15000 முதல் 20000 வரை. நிரந்தரமாக குணப்படுத்த முடியாத சிகிச்சைக்கு இப்படி செலவு செய்ய வேண்டுமா சற்றே சிந்தியுங்கள்...





                                                       நமது கிராமங்கள் தோறும் விளைந்துகிடக்கும் தொட்டற்சினுங்கி மூலிகையை நாம் அனைவரும் அறிவோம். இந்த தொட்டற்சினுங்கி இலையை ஒரு கைப்பிடி அளவு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் இருந்த இடம் தெரியாமல் பறந்தோடும் மீண்டும் வராது. 


சாப்பிடும் முறை :

காலை - வெறும்வயிற்றில்,

மதியம் - உணவுக்கு பின்,

இரவு - உணவுக்கு பின். 


பத்தியம் - அசைவ உணவுகள்.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

மரகத லிங்கம்

கேட்ட வரங்களை தரும் மரகத லிங்கம் 


                                                     நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம். கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகத லிங்கத்தை வணங்கலாம். இவற்றையெல்லாம் விட முக்கியமான விசயம், மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

                                             இந்த மரகத கல்லை லிங்கமாக செய்து வழிபடலாம் .புதனுக்கு உரிய மரகதத்தை லிங்கவடிவில் வழிபடுவது மிக சிறந்தபலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

                                         மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.

                                                                             மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி,பதவி,போன்றவற்றில் சிறந்து விளங்கலாம் .சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும் .மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால்அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம்,திருக்குவளை,திருக்கரவாசல், திருவாரூர்,திருநள்ளாறு, நாகப்பட்டினம்,திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில்உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது.

                                                                 அரிய வகை மரகத லிங்கங்கள், மாணிக்க லிங்கங்கள், கருநீல லிங்கங்கள், கனக புஷ்பராக லிங்கங்கள் நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் விற்பனைக்கு உள்ளது. தேவைப்படும் தொடர்புகொள்ளவும்.

திங்கள், 5 ஜனவரி, 2015

துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல்

                    துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல் 


                                                இன்றைய நவீன உலகில் அதிர்ஷ்டத்தை தேடி அலையாத மனிதன் யாரும் இருக்கமுடியாது, மலை அளவு உழைத்தாலும் கடுகளவாவது அதிர்ஷ்டம் வேண்டும் என்பது முன்னோர் முதுமொழி. இந்த அதிர்ஷ்டம் ஒரு மனிதனுக்கு எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாத ஒரு புதிராகவே உள்ளது. தண்ணீர் நிரம்பிய பத்திரத்தில் நாம் மேலும் பன்னீரை உற்றுவது இயலாத காரியம், அதுபோலவே துரதிர்ஷ்டம் நிரம்ப உள்ள ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்குவது என்பதும் இயலாத காரியம், எனவே முதலில் நம்மிடம் உள்ள துரதிர்ஷ்டங்களை நம்மை விட்டு அகற்ற வேண்டும். அதன் பிறகு நம்மை அதிர்ஷ்ட சாலிகளாக மாற்றிக்கொள்ள முடியும்.


                                     நம்மை ஒரு நிரம்பிய குப்பை தொட்டியாய் வைத்துக்கொண்டால் நல்லவைகளை எப்படி உள்ளே வைப்பது, எனவே நம்மை அதிர்ஷ்ட சலிகளாய் மாற்ற வேண்டுமென்றால் நம்மிடம் உள்ள துரதிர்ஷ்ட குப்பைகளை நம் உடலை விட்டு வெளியேற்ற வேண்டும். நமது துரதிர்ஷ்டங்களை போக்கி அதிர்ஷ்ட வாழ்வினை அடைய முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு சூட்சும முறையே துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல்.


                                                       துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல் முறையில் நமது துரதிர்ஷ்டங்களை போக்க இரண்டு குளியலும், அதிர்ஷ்டத்தை உண்டாக்க ஒரு குளியலும் அவசியம் செய்ய வேண்டும், மேலும் நமக்குள் தெய்வீக சக்திகளை வரவழைக்க சில அபூர்வ காயகல்ப மூலிகைகளின் சாறு கொடுக்கப்படுகிறது. 


                                                                துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல் நம்முடைய வாழ்வில் தோன்றும் கஷ்டங்களை போக்கி நல்லதொரு அதிர்ஷ்டத்தினை கொடுக்கும், திருமணத்தடை, குழந்தைப்பேறு, கல்வியில் தடை, தொழில் அமையாமை, வியாபாரத்தில் முடக்கம், வெளிநாடு செல்ல தடை, கடன் பிரச்சனை, நோய்களின் பாதிப்பு - இப்படி நீங்கள் வாழ்வில் எந்த பிரச்சனைகளை சொன்னாலும் எல்லாவற்றிக்கும் ஒரு தீர்வாக அமைவது துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல்.


சனி, 23 ஆகஸ்ட், 2014

ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை


             

                                             ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை பற்றி இங்கு காணலாம். உலகிலேயே மாந்திரீக முறையில் ஜாம்பவான்கள் மட்டுமே உபயோகித்து இன்று மறைந்து போன முறைகளில் ஒன்று மோடி வித்தை. இத்தகைய மாந்திரீக முறையை செய்பவர்களை மோடி மஸ்தான் என்பார்கள்.


                                                       ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை என்பது ஏவல் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி அவர்கள் மந்திரீகரிடம் நேரில் வராமலேயே அவர்களுக்கு உண்டான ஏவல் பில்லி சூனியத்தை நீக்குவதாகும்.



                                                        ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தையில் சுடுகாட்டு மண்ணை கொண்டு ஒரு பாவை செய்து அதில் ஏவலை நீக்குவதற்கு உண்டான எந்திரத்தை எழுதி அந்த பாவையின் ஆசன வாயில் சொருகி ஏவலால் பாதிக்கப் பட்டவரின் கைவிரலில் வெட்டப்பட்ட நகங்களை பாவையின் நகங்களில் பொருத்தி, பின் ஏவலால் பாதிக்கப் பட்டவரின் உச்சந்தலை முடியை பாவையின் உச்சந்தலையில் பொருத்தி, பாவையின் கண்களுக்கு சிவப்பு நிற கற்களை வைத்து பாவை உருவாக்கப்படும்.


                                                   அந்த ஏவல் பாவையை ஓரிடத்தில் நிற்க வைத்து அதன் அருகிலே ஏவல் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவரின் போட்டோவை வைத்து ஏவல் பாவையையும் போட்டோவையும் தனித்தனியாக ஒன்பது முறை நூலால் சுற்றி சுற்றியது போக மீதமுள்ள நூல் கண்டை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு ஏவல் இறக்கும் மந்திரத்தை தினம் ஒன்றுக்கு 108 உரு வீதம் மூன்று நாட்களும் உருவேற்றவேண்டும்.


                                             அந்த ஏவல் பாவைக்கு படையலாக இறைச்சி வகைகளும், பழவகைகள், இனிப்பு வகைகள் அவல் கடலை மதுபானம் சுருட்டு முதலியன படைக்கவேண்டும் . ஒரு நாள் ஏவலுக்கு படைத்ததை மறுநாள் மாற்றி மீண்டும் புதிதாக படைக்க வேண்டும். இப்படி மூன்று நாட்களும் படையல் படைக்க வேண்டும்.


                                              மூன்று நாட்கள் முடிந்தவுடன் அந்த ஏவல் பாவையை ஒரு மண் சட்டியில் வைத்து பூமியில் புதைக்க ஏவல் பில்லி சூனிய பாதிப்பு நீங்கி அந்த நபர் குணமடைவர். இப்படி ஆளே நேரில் வராமல் ஏவலை நீக்குவது மோடி வித்தை ஆகும்.

அமானுஷ்யம் மோகினி பிசாசை வைத்து உருவேற்றிய ஏவல்

            அமானுஷ்யம் மோகினி பிசாசை வைத்து உருவேற்றிய ஏவல் 



                                           கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து ............. என்ற நபர் சர்வ சக்தி விருட்ச பீடம் வந்து என்னை சந்தித்தார். பார்பதற்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் போன்ற தோற்றம் தெரிந்தது. ஆனால் அவர் முகம் மட்டும் களையிழந்து சோகம் படர்ந்து காணப்பட்டது. சிறிது நேரத்தில் அவரே தனக்கு நடந்து கொண்டிருக்கும் அமானுஷ்ய விஷயங்களை சொல்ல ஆரம்பித்தார்.


நான் இரவில் நிம்மதியாக தூங்கி பத்து வருட காலம் ஆகிவிட்டது, எனது படுக்கை அறையில் சென்று மின்விசிறியை ஆன் செய்தால் அந்த மின்விசிறியில் ஒரு ஆணும் பெண்ணும் (அமானுஷ்ய உருவங்கள்) நிர்வாணமாக வந்து பாட்டுப்படி என்னை கேலி செய்கிறது. மின்விசிறியை அணைத்துவிட்டு சுவற்றை பார்த்தல் அதே அமானுஷ்ய ஆண் பெண் உருவங்கள் சுவற்றில் வந்து நிர்வாணமாக நடனமாடுகிறது, நானும் எனது மனைவியும் படுக்கையில் இருந்ததை சொல்லி கேலி செய்கிறது. பகலில் காரை ஓட்டிச் சென்றால் எதிரில் வரும் வாகனதில் இதே அமானுஷ்ய உருவங்கள் நிர்வாணமாக வந்து நடனமாடி கேலி செய்கிறது, இதனை ஒருகணம் பார்த்தல் உடனே விபத்து ஏற்பட்டு விடுகிறது. இதுவரை கடந்த பத்து வருடத்தில் சுமார் இருபது முறை விபத்து உண்டாகி அதில் தப்பிதிருகிறேன், அதேபோல் வியாபாரத்திலும் இந்த பத்து வருடத்தில் கையில் இருந்த 22 கோடி ரூபாயை இழந்து மேலும் 3 கோடி கடனுமாகி அந்த கடனுக்கு மதம் 6 இலட்சம் ரூபாய் வரை வட்டி கட்டி வருவதாகவும், இப்படி தனக்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை பிறரிடம் சொன்னால் என்னை பைத்தியகாரன் என்று முத்திரை குத்துகிறார்கள். கட்டிய மனைவியும் பெற்ற மகளும் கூட நான் சொல்வதை நம்பவில்லை மாறாக என்னை கேலி செய்கின்றனர். இந்த தர்ம சங்கடத்தில் இருந்து என்னை காப்பாற்றி என் வியாபாரங்கள் மீண்டும் செழித்து கடன்கள் அடைந்து நிமதியாக நான் வாழ வழிகாட்ட வேண்டும் என்று கெஞ்சினார்.


இதையெல்லாம் பொறுமையாக கேட்டுவிட்டு பூஜையில் அமர்ந்து இவருக்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கு என்ன காரணம், அதை எப்படி நீக்குவது என்பதை என் அன்னையிடம் கேட்டேன். என் அன்னை எனக்கு தெளிவுபடுத்தினாள். பின் அவருக்கு விஷயங்களை தெளிவாக விளக்கினேன்.


உங்கள் முதல் மனைவி என்ன செய்தார் என்றேன்? அவளுக்கும் எனக்கும் ஒத்துவரவில்லை வரவில்லை, அவளுடன் வாழ விருப்பமில்லை எனவே விவாகரத்து கொடுத்துவிட்டேன் என்றார். பின் இரண்டு வருடம் கழிந்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன், இப்போது என் மகளுக்கு 22 வயதாகிறது. அடுத்த மாதம் மகளுக்கு திருமணம் என்றார்.


உங்கள் முதல் மனைவி தான் நீங்கள் நிம்மதியுடன் வாழவே கூடாது என்று திறமையான ஒரு மந்திரீகரை அழைத்து மோகினிகளை வைத்து உருவேற்றி ஏவலை செய்து வைத்துள்ளார். அந்த மோகினி உருவங்களே வந்து உங்களுக்கு துன்பம் தருகிறது. அந்த ஏவல் தான் உங்கள் குடும்பமும், வியாபாரமும் சீர் குலைந்ததற்கு காரணம் என்று சொன்னேன்.


இந்த ஏவலை மிகவும் கஷ்டப்பட்டுத்தான் போக்க முடியும். மிகவும் கடுமையான விஷயம் தான் கவனமாக நீக்க வேண்டும் இதில் கரணம் தப்பினால் இதை போக்கும் எனக்கு மரணம் தான் என்றேன். இருந்தாலும் உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது நாளை வாருங்கள் உங்களுக்கான பரிகாரங்களை துவக்கி விடுகிறேன் என்றேன்.


மறுநாள் அவரும் வந்தார் சில கடினமான பரிகார முறைகளை மேற்கொண்டு அவருக்கு செய்து வைத்த ஏவலை நீக்கி அவரை அனுப்பிவைத்தேன். இப்பொழுது அவருக்கு அந்த அமானுஷ்ய சம்பவங்கள் ஏதும் நடப்பதில்லை, மிகவும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறார். அவரின் வியாபாரங்களும் நன்றாக நடைபெற்று வருகிறது. அமானுஷ்ய உண்மை சம்பவங்கள் தொடரும்....

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க