திங்கள், 23 பிப்ரவரி, 2015

மூல நோயிக்கு அற்புத மருந்து

                                      
                                                           மூல நோய்


                                                    மனிதனுக்கு உண்டாகக் கூடிய பலவகையான நோய்களில் மூல நோய் ஒன்றாகும். சரியாக சிகிச்சை மேற்கொள்ளாமல் விடப்படும் மூல நோய் - புற்று நோயாக மாறும் வாய்ப்புகள் அதிகம். ஆசன வாய் பகுதியில் உள்ள இரத்தக் குழாய்கள் தடிமன் ஆவது தான் மூல நோய்.



மூல நோய் - அறிகுறிகள் :


1. ஆசன வாயில் ( மலம் வெளியேறும் பாதையில் ) அரிப்பு உண்டாகுதல்.

2. மலசிக்கல் ஏற்படுதல், மலத்துடன் இரத்தம் கலந்து வெளியேறுதல்,

3. ஆசனவாயில் தொடர்ந்து உண்டாகும் வலி, எரிச்சல், அரிப்பு.

4.ஆசன வாயின் உள்பகுதி வீங்கி, மலம் கழிக்க சிரமப்படுதல் (உள் மூலம்).

5. ஆசன வாயின் வெளிப்பகுதியில் முளை போல் சதை வீங்கி தள்ளி உட்கார, படுக்க, மலம் கழிக்க முடியாத அளவுக்கு வலி, வேதனை சிரமத்தை உண்டாக்குதல். ( இதுவே வெளி மூலம் ஆகும் ).

6. மலவாய் எரிச்சல், விந்து கெடுதல், வயிற்று இரைச்சல், வயிறு நொந்து மலம் கழிதல், பசியின்மை, புளி ஏப்பம், நீர் வேட்கை, உடல் மெலிதல், உடல் பலம் குறைதல்,

7. மூல நோயானது மன ரீதியாகவும் பாதிப்படைய செய்யும், மனம் தளரும், நம்மை எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ள செய்யும்.




மூல நோய் - உண்டாக காரணங்கள் :


1. தொடர்ந்து உண்டாகும் மலசிக்கல்,

2. உடல் எடை ( தொந்தி ) யால் ஏற்படும் வயிற்று அழுத்தம்,

3. பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கரு வளர்ச்சியால் உண்டாகும் வயிற்று அழுத்தம்,

4. பரம்பரை மற்றும் அதிக உடல் உஷ்ணம்,

5. கிழங்கு வகைகள் ( கருணை கிழங்கு தவிர ), மாமிச உணவுகள், உணவில் அதிகப்படியான காரம் சேர்த்து உண்பதாலும்,

6. தொடர்ந்து உட்கார்ந்தபடி வேலை செய்பவர்களுக்கு, 

7. வேளைக்கு உணவு உட்கொள்ளாமல் ( பட்டினி ) இருப்பதால் மூலாதாரத்தில் வெப்பம் அதிகமாவதால்,



                                             இன்றைய ஆங்கில மருத்துவத்தில் மூல நோயிக்கு அறுவை சிகிச்சை (ஆபரேசன் ) ஒன்று தான் தீர்வாக உள்ளது, அப்படியே அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் மீண்டும் மீண்டும் மூல நோய் வந்து நம்மை தீராத துன்பத்தில் ஆழ்த்துகிறது என்பதே உண்மை, இந்த முறையில் அறுவை சிகிச்சை ஒரு முறை செய்ய ஆகும் செலவு ஏறத்தாழ ரூபாய் 15000 முதல் 20000 வரை. நிரந்தரமாக குணப்படுத்த முடியாத சிகிச்சைக்கு இப்படி செலவு செய்ய வேண்டுமா சற்றே சிந்தியுங்கள்...





                                                       நமது கிராமங்கள் தோறும் விளைந்துகிடக்கும் தொட்டற்சினுங்கி மூலிகையை நாம் அனைவரும் அறிவோம். இந்த தொட்டற்சினுங்கி இலையை ஒரு கைப்பிடி அளவு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் இருந்த இடம் தெரியாமல் பறந்தோடும் மீண்டும் வராது. 


சாப்பிடும் முறை :

காலை - வெறும்வயிற்றில்,

மதியம் - உணவுக்கு பின்,

இரவு - உணவுக்கு பின். 


பத்தியம் - அசைவ உணவுகள்.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

மரகத லிங்கம்

கேட்ட வரங்களை தரும் மரகத லிங்கம் 


                                                     நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம். கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகத லிங்கத்தை வணங்கலாம். இவற்றையெல்லாம் விட முக்கியமான விசயம், மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

                                             இந்த மரகத கல்லை லிங்கமாக செய்து வழிபடலாம் .புதனுக்கு உரிய மரகதத்தை லிங்கவடிவில் வழிபடுவது மிக சிறந்தபலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

                                         மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.

                                                                             மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி,பதவி,போன்றவற்றில் சிறந்து விளங்கலாம் .சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும் .மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால்அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம்,திருக்குவளை,திருக்கரவாசல், திருவாரூர்,திருநள்ளாறு, நாகப்பட்டினம்,திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில்உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது.

                                                                 அரிய வகை மரகத லிங்கங்கள், மாணிக்க லிங்கங்கள், கருநீல லிங்கங்கள், கனக புஷ்பராக லிங்கங்கள் நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் விற்பனைக்கு உள்ளது. தேவைப்படும் தொடர்புகொள்ளவும்.

திங்கள், 5 ஜனவரி, 2015

துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல்

                    துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல் 


                                                இன்றைய நவீன உலகில் அதிர்ஷ்டத்தை தேடி அலையாத மனிதன் யாரும் இருக்கமுடியாது, மலை அளவு உழைத்தாலும் கடுகளவாவது அதிர்ஷ்டம் வேண்டும் என்பது முன்னோர் முதுமொழி. இந்த அதிர்ஷ்டம் ஒரு மனிதனுக்கு எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாத ஒரு புதிராகவே உள்ளது. தண்ணீர் நிரம்பிய பத்திரத்தில் நாம் மேலும் பன்னீரை உற்றுவது இயலாத காரியம், அதுபோலவே துரதிர்ஷ்டம் நிரம்ப உள்ள ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்குவது என்பதும் இயலாத காரியம், எனவே முதலில் நம்மிடம் உள்ள துரதிர்ஷ்டங்களை நம்மை விட்டு அகற்ற வேண்டும். அதன் பிறகு நம்மை அதிர்ஷ்ட சாலிகளாக மாற்றிக்கொள்ள முடியும்.


                                     நம்மை ஒரு நிரம்பிய குப்பை தொட்டியாய் வைத்துக்கொண்டால் நல்லவைகளை எப்படி உள்ளே வைப்பது, எனவே நம்மை அதிர்ஷ்ட சலிகளாய் மாற்ற வேண்டுமென்றால் நம்மிடம் உள்ள துரதிர்ஷ்ட குப்பைகளை நம் உடலை விட்டு வெளியேற்ற வேண்டும். நமது துரதிர்ஷ்டங்களை போக்கி அதிர்ஷ்ட வாழ்வினை அடைய முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு சூட்சும முறையே துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல்.


                                                       துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல் முறையில் நமது துரதிர்ஷ்டங்களை போக்க இரண்டு குளியலும், அதிர்ஷ்டத்தை உண்டாக்க ஒரு குளியலும் அவசியம் செய்ய வேண்டும், மேலும் நமக்குள் தெய்வீக சக்திகளை வரவழைக்க சில அபூர்வ காயகல்ப மூலிகைகளின் சாறு கொடுக்கப்படுகிறது. 


                                                                துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல் நம்முடைய வாழ்வில் தோன்றும் கஷ்டங்களை போக்கி நல்லதொரு அதிர்ஷ்டத்தினை கொடுக்கும், திருமணத்தடை, குழந்தைப்பேறு, கல்வியில் தடை, தொழில் அமையாமை, வியாபாரத்தில் முடக்கம், வெளிநாடு செல்ல தடை, கடன் பிரச்சனை, நோய்களின் பாதிப்பு - இப்படி நீங்கள் வாழ்வில் எந்த பிரச்சனைகளை சொன்னாலும் எல்லாவற்றிக்கும் ஒரு தீர்வாக அமைவது துரதிர்ஷ்டம் போக்கி ஐஸ்வர்யம் தரும் மலர் குளியல்.


சனி, 23 ஆகஸ்ட், 2014

ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை


             

                                             ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை பற்றி இங்கு காணலாம். உலகிலேயே மாந்திரீக முறையில் ஜாம்பவான்கள் மட்டுமே உபயோகித்து இன்று மறைந்து போன முறைகளில் ஒன்று மோடி வித்தை. இத்தகைய மாந்திரீக முறையை செய்பவர்களை மோடி மஸ்தான் என்பார்கள்.


                                                       ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை என்பது ஏவல் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி அவர்கள் மந்திரீகரிடம் நேரில் வராமலேயே அவர்களுக்கு உண்டான ஏவல் பில்லி சூனியத்தை நீக்குவதாகும்.



                                                        ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தையில் சுடுகாட்டு மண்ணை கொண்டு ஒரு பாவை செய்து அதில் ஏவலை நீக்குவதற்கு உண்டான எந்திரத்தை எழுதி அந்த பாவையின் ஆசன வாயில் சொருகி ஏவலால் பாதிக்கப் பட்டவரின் கைவிரலில் வெட்டப்பட்ட நகங்களை பாவையின் நகங்களில் பொருத்தி, பின் ஏவலால் பாதிக்கப் பட்டவரின் உச்சந்தலை முடியை பாவையின் உச்சந்தலையில் பொருத்தி, பாவையின் கண்களுக்கு சிவப்பு நிற கற்களை வைத்து பாவை உருவாக்கப்படும்.


                                                   அந்த ஏவல் பாவையை ஓரிடத்தில் நிற்க வைத்து அதன் அருகிலே ஏவல் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவரின் போட்டோவை வைத்து ஏவல் பாவையையும் போட்டோவையும் தனித்தனியாக ஒன்பது முறை நூலால் சுற்றி சுற்றியது போக மீதமுள்ள நூல் கண்டை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு ஏவல் இறக்கும் மந்திரத்தை தினம் ஒன்றுக்கு 108 உரு வீதம் மூன்று நாட்களும் உருவேற்றவேண்டும்.


                                             அந்த ஏவல் பாவைக்கு படையலாக இறைச்சி வகைகளும், பழவகைகள், இனிப்பு வகைகள் அவல் கடலை மதுபானம் சுருட்டு முதலியன படைக்கவேண்டும் . ஒரு நாள் ஏவலுக்கு படைத்ததை மறுநாள் மாற்றி மீண்டும் புதிதாக படைக்க வேண்டும். இப்படி மூன்று நாட்களும் படையல் படைக்க வேண்டும்.


                                              மூன்று நாட்கள் முடிந்தவுடன் அந்த ஏவல் பாவையை ஒரு மண் சட்டியில் வைத்து பூமியில் புதைக்க ஏவல் பில்லி சூனிய பாதிப்பு நீங்கி அந்த நபர் குணமடைவர். இப்படி ஆளே நேரில் வராமல் ஏவலை நீக்குவது மோடி வித்தை ஆகும்.

அமானுஷ்யம் மோகினி பிசாசை வைத்து உருவேற்றிய ஏவல்

            அமானுஷ்யம் மோகினி பிசாசை வைத்து உருவேற்றிய ஏவல் 



                                           கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து ............. என்ற நபர் சர்வ சக்தி விருட்ச பீடம் வந்து என்னை சந்தித்தார். பார்பதற்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் போன்ற தோற்றம் தெரிந்தது. ஆனால் அவர் முகம் மட்டும் களையிழந்து சோகம் படர்ந்து காணப்பட்டது. சிறிது நேரத்தில் அவரே தனக்கு நடந்து கொண்டிருக்கும் அமானுஷ்ய விஷயங்களை சொல்ல ஆரம்பித்தார்.


நான் இரவில் நிம்மதியாக தூங்கி பத்து வருட காலம் ஆகிவிட்டது, எனது படுக்கை அறையில் சென்று மின்விசிறியை ஆன் செய்தால் அந்த மின்விசிறியில் ஒரு ஆணும் பெண்ணும் (அமானுஷ்ய உருவங்கள்) நிர்வாணமாக வந்து பாட்டுப்படி என்னை கேலி செய்கிறது. மின்விசிறியை அணைத்துவிட்டு சுவற்றை பார்த்தல் அதே அமானுஷ்ய ஆண் பெண் உருவங்கள் சுவற்றில் வந்து நிர்வாணமாக நடனமாடுகிறது, நானும் எனது மனைவியும் படுக்கையில் இருந்ததை சொல்லி கேலி செய்கிறது. பகலில் காரை ஓட்டிச் சென்றால் எதிரில் வரும் வாகனதில் இதே அமானுஷ்ய உருவங்கள் நிர்வாணமாக வந்து நடனமாடி கேலி செய்கிறது, இதனை ஒருகணம் பார்த்தல் உடனே விபத்து ஏற்பட்டு விடுகிறது. இதுவரை கடந்த பத்து வருடத்தில் சுமார் இருபது முறை விபத்து உண்டாகி அதில் தப்பிதிருகிறேன், அதேபோல் வியாபாரத்திலும் இந்த பத்து வருடத்தில் கையில் இருந்த 22 கோடி ரூபாயை இழந்து மேலும் 3 கோடி கடனுமாகி அந்த கடனுக்கு மதம் 6 இலட்சம் ரூபாய் வரை வட்டி கட்டி வருவதாகவும், இப்படி தனக்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை பிறரிடம் சொன்னால் என்னை பைத்தியகாரன் என்று முத்திரை குத்துகிறார்கள். கட்டிய மனைவியும் பெற்ற மகளும் கூட நான் சொல்வதை நம்பவில்லை மாறாக என்னை கேலி செய்கின்றனர். இந்த தர்ம சங்கடத்தில் இருந்து என்னை காப்பாற்றி என் வியாபாரங்கள் மீண்டும் செழித்து கடன்கள் அடைந்து நிமதியாக நான் வாழ வழிகாட்ட வேண்டும் என்று கெஞ்சினார்.


இதையெல்லாம் பொறுமையாக கேட்டுவிட்டு பூஜையில் அமர்ந்து இவருக்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கு என்ன காரணம், அதை எப்படி நீக்குவது என்பதை என் அன்னையிடம் கேட்டேன். என் அன்னை எனக்கு தெளிவுபடுத்தினாள். பின் அவருக்கு விஷயங்களை தெளிவாக விளக்கினேன்.


உங்கள் முதல் மனைவி என்ன செய்தார் என்றேன்? அவளுக்கும் எனக்கும் ஒத்துவரவில்லை வரவில்லை, அவளுடன் வாழ விருப்பமில்லை எனவே விவாகரத்து கொடுத்துவிட்டேன் என்றார். பின் இரண்டு வருடம் கழிந்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன், இப்போது என் மகளுக்கு 22 வயதாகிறது. அடுத்த மாதம் மகளுக்கு திருமணம் என்றார்.


உங்கள் முதல் மனைவி தான் நீங்கள் நிம்மதியுடன் வாழவே கூடாது என்று திறமையான ஒரு மந்திரீகரை அழைத்து மோகினிகளை வைத்து உருவேற்றி ஏவலை செய்து வைத்துள்ளார். அந்த மோகினி உருவங்களே வந்து உங்களுக்கு துன்பம் தருகிறது. அந்த ஏவல் தான் உங்கள் குடும்பமும், வியாபாரமும் சீர் குலைந்ததற்கு காரணம் என்று சொன்னேன்.


இந்த ஏவலை மிகவும் கஷ்டப்பட்டுத்தான் போக்க முடியும். மிகவும் கடுமையான விஷயம் தான் கவனமாக நீக்க வேண்டும் இதில் கரணம் தப்பினால் இதை போக்கும் எனக்கு மரணம் தான் என்றேன். இருந்தாலும் உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது நாளை வாருங்கள் உங்களுக்கான பரிகாரங்களை துவக்கி விடுகிறேன் என்றேன்.


மறுநாள் அவரும் வந்தார் சில கடினமான பரிகார முறைகளை மேற்கொண்டு அவருக்கு செய்து வைத்த ஏவலை நீக்கி அவரை அனுப்பிவைத்தேன். இப்பொழுது அவருக்கு அந்த அமானுஷ்ய சம்பவங்கள் ஏதும் நடப்பதில்லை, மிகவும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறார். அவரின் வியாபாரங்களும் நன்றாக நடைபெற்று வருகிறது. அமானுஷ்ய உண்மை சம்பவங்கள் தொடரும்....

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

அஷ்ட கர்மங்களுக்கான மந்திரங்கள்

                                   
                                     அஷ்ட கர்மங்களுக்கான மந்திரங்கள்


1. வசியம் :
ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஓம் யங் ய ந ம சி வ சர்வ லோக வசி வசி ஸ்வாஹா !


2.மோகனம் :
ஓம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஓம் சங் ம சி வ ய ந மோகனாய ஸ்வாஹா !

3. உச்சாடனம் :
ஓம் ரங் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் க்லீம் ஐம் வ ய ந ம சி ஓம் ஸ்வாஹா !
4. ஸ்தம்பனம் :
ஓம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ந ம சி வ ய ஓம் ஸ்வாஹா !


5. ஆக்ருஷ்ணம் :
ஓம் ஐம் சௌம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சௌம் ஐம் ந சி ய ம வ ஓம் ஆக்ருஷ்ணாயா நமஹா ஓம் ஸ்வாஹா !


6. பேதனம் :
ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் க்லீம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ந ய வ சி ம ஓம் ஸ்வாஹா !


7. வித்வேஷனம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் ஐம் க்லீம் க்லீம் ஐம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் ய வ சி ந ம ஓம் ஸ்வாஹா !



8. மாரணம் : 
ஓம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் க்லீம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் ஓம் சி வ ய ந ம ஹா ஓம் ஸ்வாஹா !

சாபங்கள் பலிக்குமா ?

                                                    சாபங்கள் பலிக்குமா ?



                                                                        இந்த கேள்விக்கு பதில் பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. எல்லோரும் நினைத்த நேரத்தில் கண்ட கண்ட காரணங்களுக்காக நியாயமே இல்லாமல் கொடுக்கும் சாபங்கள் எல்லாம் பலிக்காது, நியாயமான காரணங்களுக்காக மனம் நொந்து சபித்தால் மட்டுமே சாபங்கள் பலிக்கும். இப்படி மனிதனுக்கு வாழ்வில் வரும் சாபங்கள் மற்ற மனிதர்கள் கொடுக்கும் சாபம் மட்டுமல்ல, இவையன்றி பல வகைகளிலும் சாபங்கள் உண்டாகின்றன, அப்படிப்பட்ட சாபங்கள் பலவகைப்படும். அவை பெண் சாபம், பிரேத சாபம், பித்ருசாபம், சர்ப்பசாபம், கோசாபம், பூசாபம் (பூமி சாபம்), கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், முனி சாபம், பிரம்ம சாபம் மற்றும் குல தெய்வ சாபம்.


1.பெண் சாபம் : 


பெண்களை ஏமாற்றுதல், சகோதரிகளை, தாயை ஆதரிக்காமல் கைவிடுவது, மனைவியை கைவிடுவது ஏமாற்றுவது மனம் நோகும்படி செய்வது இந்த காரணங்களால் பெண் சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வம்சம் நாசமாகும்.



2.பிரேத சாபம் :

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாக பேசுவது, பிணத்தை தாண்டுவது, இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பது, இறந்தவரின் உடலை உறவினர்கள் பார்க்கவிடாமல் தடுப்பது, சாவு நடந்த வீட்டில் இருந்து 98 அடி வரை தீட்டு உண்டு அந்த எல்லைக்குள் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் உடலை அடக்கம் செய்யும் முன்பு உணவு உண்பது, தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வது போன்ற காரணங்களால் பிரேத சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வியாதிகள், அவமானங்கள், கடன்கள், அற்ப ஆயுள், ஆயுள் குறைவு உண்டாகிறது.


3.பிரம்ம சாபம் :

வித்தை கற்று தந்த குருவை மறப்பது, நிந்திப்பது, தவறாக பேசுவது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, கற்ற வித்தையை பிறருக்கு சொல்லிக்கொடுக்காமல் மறைப்பது போன்ற காரணங்களால் பிரம்ம சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வித்யா நட்டம் என்னும் கல்வியில் குறைபாடு உண்டாகிறது.


4. சர்ப்ப சாபம் :

பாம்புகளை தேவையின்றி கொல்வது, அவற்றின் இருப்பிடங்களை தேவையின்றி அழிப்பது போன்ற காரணங்களால் சர்ப்ப சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக திருமண தடை, செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் முதலியன உண்டாகிறது.


5. பித்ரு சாபம் :

தாய் - தந்தை, தாத்தா - பாட்டி ஆகியோர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்யாமல் இறுதி காலத்தில் அவர்களை தவிக்கவிடுவது, உதாசீனப்படுத்துவது, ஒதுக்கிவைப்பது, அவர்கள் இறந்த பின்பு செய்ய வேண்டிய திதி பரிகாரங்களை செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் பித்ரு சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக ஆண்வாரிசுகள் இல்லாமல் போகும், பலரிஷ்ட்ட தோஷத்தால் குழந்தைகள் இறக்கும்.


6. கோ சாபம் :

பசுவை வதைப்பது, பால் வற்றிய பசுவை இறைசிக்காக வெட்ட கொடுப்பது, கன்றையும் - பசுவையும் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்க மறுப்பது, பசுவுக்கு போதிய உணவளிக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வாழ்வில் வளர்சிகள் இல்லாமல் தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும்.


7. பூ (பூமி) சாபம் :

ஆத்திரத்தால் பூமியை சதா காலால் உதைப்பது, பூமியை பாழ்படுத்துவது, பூமியை சீர் கேடாக்கும் பொருட்களை பூமியில் புதைப்பது, தேவையற்ற பள்ளங்களை உண்டாக்குவது, பிறரின் பூமியை அபகரிப்பது போன்ற காரணங்களால் பூ ( பூமி ) சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வாழ்வில் நரக வேதனை அடைய நேரிடும்.


8. கங்கா சாபம் :

பலர் அருந்தக்கூடிய நீரை பாழாக்குவது, நீரை தேவைக்கு அதிகம் வீணாக்குவது, ஓடும் நதியை அசுத்தம் செய்வது போன்ற காரணங்களால் கங்கா சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக உடலில் நீர் சம்பந்தமான நோய்கள் உண்டாகி வாட்டும், நம் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும்.


9. விருட்ச சாபம் :

பசும் மரத்தை வெட்டுவது, கனி கொடுக்கும் மரத்தை பட்டுப் போக செய்வது, மரங்களை எரிப்பது, மரங்கள் சூழ்ந்த இடங்களை கட்டிடங்கள் கட்ட அழிப்பது, வனங்களை அழிப்பது போன்ற காரணங்களால் விருட்ச சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வாழ்வில் தீரா கடன்கள், நோய்கள், வாகன விபத்துக்கள் உண்டாகி வாட்டும்.


10. தேவ சாபம் :

முன்னோர்கள் பூஜித்து வந்த தெய்வங்களின் பூஜையை செய்யாமல் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்ந்து பேசுவது, தெய்வ காரியங்களுக்கு உதவாமல் ஏளனம் செய்வது போன்ற காரணங்களால் தேவ சாபம் உண்டாகிறது. 


ரிஷி சாபம் :

. உண்மையான ஆசார்ய புருஷர்களை, பக்த்தர்களை, ஆன்மீக வாதிகளை மதிக்காமல் அவமதிப்பது போன்ற காரணங்களால் ரிஷி சாபம் உண்டாகிறது.


முனி சாபம் :

காவல் மற்றும் எல்லை தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும், பூஜைகளையும் செய்யாமல் உதாசீனப்படுத்துவது ஆகிய காரணங்களால் முனி சாபம் உண்டாகிறது.


குல தெய்வ சாபம் :

குல தெய்வங்களுக்கு உண்டான பூஜைகளையும் மரியாதைகளையும் செய்யாமல் அவமதிப்பதால் குல தெய்வ சாபம் உண்டாகும்.


                                             மேலே குறிப்பிட்ட தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம், குல தெய்வ சாபம் முதலியவற்றால் நமது வாழ்வில் உறவினர் பிரிவு, வம்ச அழிவு, செய்வினை, ஏவல், பில்லி, சூன்ய பாதிப்புகள் ஏற்பட்டு நமது குடும்பம் சீர்கெட்டு போகும்.



                                                                            இவ்வாறு நமக்கு வாழ்வில் பல வழிகளில் சாபங்கள் தோன்றி நம் வாழ்வினை பாதிக்கும் நிலைகள் உண்டு. இத்தகைய பாதிப்புகளால் அவதிப்பட்டு வருபவர்கள், என்ன காரணத்தினால் நம் வாழ்வில் துன்பங்கள் வருகிறது என்றே தெரியாமல் வாழ்வில் கஷ்டமும் வேதனையும் அடைந்து வருபவர்கள் நமது ஸ்ரீ விருக்ஷ பீடத்தினை அணுகி ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகளை சந்தித்து உரிய பரிகார முறைகளை தெரிந்துகொண்டு அதனை முறைப்படி செய்து வாழ்வில் வழம் பெற்று வாழ வாழ்த்துகிறோம். நேரில் வர இயலாதவர்கள் தொலைப்பேசி, இ மெயில் வாயிலாகவும் தொடர்புகொண்டு தகவல்களை பெறலாம்.



தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க