வியாழன், 17 ஜூலை, 2014

அபூர்வ காயகற்ப மூலிகை கல்பிறமி


                                     அபூர்வ காயகற்ப மூலிகை கல்பிறமி




கல்லை இளக்கி மெழுகாக்கும் 
கல்லில் பிறமி இதன்பெருமை 
சொல்லில் உணர்த்த முடியாது 
சொக்கர் அறிவார் யாரறிவார் 
பல்லு உதிர்ந்தது தான்முளைத்து 
பாலன் ஆவான் கொண்டவனும் 
நில்லா உடலும் நிலைத்துவிடும் 
நீண்டு ஆயுள் பெருகிடுமே 
                                                 - தேரையர். 


                                               இந்த அபூர்வ காயகற்ப மூலிகை கல்பிறமி பற்றி தேரையர் பாடிய பாடல். அபூர்வ காயகற்ப மூலிகை கல்பிறமி கல்லைக்கூட இளகவைத்து மெழுகின் பதமாக்க கூடியது என்றும் இந்த அபூர்வ மூலிகையின் சக்தியை வார்த்தைகளால் சொல்ல முடியாதது எனவும் அந்த சிவபெருமானை தவிர இதன் சக்தியை தெரிந்தவர் இந்த உலகில் யாரும் கிடையாது என்றும் இந்த அபூர்வ காயகற்ப மூலிகை கல்பிறமியை முறைப்படி உண்டுவந்தால் பல்லு உதிர்ந்த கிழவனும் மீண்டும் பல் முளைத்து வாலிபன் ஆகிவிடுவான் என்றும் அழிந்துப் போகக்கூடிய அழியாமல் காயகற்பம் ஆகி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றும் தேரையர் குறிப்பிடுகிறார். இன்னும் சில சித்தர் பாடலின்படி நாக ரச மெழுகு, வெள்ளி ரச மெழுகு, வெள்வங்க ரச மெழுகு, அயகாந்த ரச மெழுகு முதலியவை உடலை காயகற்பம் ஆக்குவதற்கும் கௌரி பாஷாண மெழுகு, வெள்ளை பாஷாண மெழுகு, கார்முகில் பாஷாண மெழுகு, செம்புத்தொட்டி பாஷாண மெழுகு முதலியவை மூலம் இரசவாதம் என்னும் தங்கத்தை உருவாக்கும் வித்தையும் செய்யப்பட்டது என்று அறிய முடிகிறது. அபூர்வ காயகற்ப மூலிகை கல்பிறமி பற்றி வாசகர்கள் அறிந்துகொள்ளவே இங்கே புகைப்படத்துடன் விளக்கினேன்.

ஞாயிறு, 6 ஜூலை, 2014

கர்மா விதியை வெல்லும் சூட்சுமங்கள்

கர்மா விதியை வெல்லும் சூட்சுமங்கள்



"கருவமைப்பின் வழிவந்த வினைபதிவு சஞ்சிதமாம் 
உருவெடுத்த பின்கொண்ட வினைபதிவு பிராப்தம் 
இருவினையும் கூடி எழும் புகுவினையே ஆகாமியம் 
ஒருவினையும் வீண்போக உள்ளடங்கி பின்விளைவாம்" 
                                                                                    - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி 


                                                                மேற்கண்ட பாடலின் படி மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம வினைகளை பெற்று அனுபவிக்கிறான். அவை சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம். இதில் சஞ்சித கர்மம் என்பது நம் கரு உருவாகும் போதே உடன் உருவாவது, அதாவது முன்ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணியத்தின் வித்தாக இந்த பிறவியில் நம்மை பற்றிக்கொள்ளும் கர்ம வினையாகும். பிராப்த கர்மா என்பது நாம் இந்த பிறவியில் உடலெடுத்து வாழும் காலத்தில் நம் ஜீவனத்துக்காக நாம் செய்யும் தொழிலின் வாயிலாகா நாம் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் உண்டாகும் கர்ம வினை, இந்த கர்மாவால் வரும் பலனையும் நாம் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும், மூன்றாவதாக ஆகாமிய கர்மா என்பது இந்த பிறவியில் நாம் வாழும் காலத்தில் நம் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது, இவ்விதமாக மூன்று வகையான கர்மாக்கள் நம்மை சூழ்ந்துள்ளன.


                                                                  இந்த கர்மவினைகளில் இருந்து யாரும் தப்பிவிட இயலாது, அனைவரும் கர்மவினையில் சிக்கி உழன்றாக வேண்டியதுதான், நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், முடக்கங்கள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் நான் மேலே குறிப்பிட்ட கர்ம வினைகளின் சாராம்சம் ஆகும். இந்த கர்ம வினைகளை களைய நம்மில் பலர் பல ஆலயங்களுக்கு சென்றும், பலவிதமான பரிகாரங்களை மேற்கொண்டும் கைப்பணம் செலவானதுதான் மிச்சம், நம் கர்ம வினைப் பலன்கள் மட்டும் மாறிய பாடில்லை, நம் வேதனை தீர்ந்த பாடில்லை. அப்படியென்றால் நம் கர்ம வினைகளை தீர்க்க வழியே இல்லையா ?

                               ஏன் இல்லை. கர்ம வினைகளை நீக்க பரிகாரங்கள் உள்ளது, ஆனால் அதனை நமக்கு சரியாக விளக்கி சொல்ல ஆட்கள்தான் இல்லை. இங்கே என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய, நமது புராணங்களும், சாஸ்திரங்களும் பறைசாற்றுகின்ற கர்ம வினைகளை நீக்கும் உபாயங்களை விவரிக்கிறேன்.


பிரம்மா - எல்லா படைப்பு இயக்கங்களையும் செய்பவர். அவரின் படைப்புக்கு தேவையான ஞானத்தினை தருகிற சரஸ்வதி அவரின் மனைவி.

விஷ்ணு - காக்கும் கடவுள், எல்லா உயிர்களையும் இரட்சித்து காப்பவர். இவர் உலகினை காக்க செல்வம் வேண்டுமல்லவா? அதை அவருக்கு நல்க செல்வத்திற்கு அதிபதியான மஹா லக்ஷ்மி அவரின் மனைவி.

சிவம் - அழிக்கும் கடவுள். மனிதனின் அஞ்ஞான இருளை, கர்மவினைகளை, தீமைகளை அளித்து நன்மை தருபவர். இவருக்கு தீமைகளை அழிக்கின்ற சக்தியினை தருவதற்கு சக்தி தேவியே இவருக்கு துணைவியாக.


                                           அப்படியென்றால் நம் கர்ம வினைகள் நீங்க நாம் யாரை பற்ற வேண்டும்? நம் கர்ம வினைகளை யாரால் தீர்க்க முடியும்? தேவாதி தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் தேடிச்சென்று சரண் புகுந்தது யாரிடம்? அறியா பருவ குழந்தைகூட சொல்லிவிடும் அத்தகைய ஆற்றல் கொண்டவர் சிவபெருமான் ஒருவரே என்று. நாமும் நம் கர்ம வினைகள் நீங்க அவரையே பற்ற வேண்டும். சரி அவரை பற்றிவிட்டோம். நம் கர்ம வினைகள் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்.


                                                  மனித உடல் இறைவனால் பஞ்சபூதத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, கற்று, ஆகாயம் என்பவை பஞ்ச பூதங்களாகும். சிவனே பஞ்சபூத பெருமையை சிறப்பிக்கும் விதமாக பஞ்சபூத தலங்களில் நாயகனாக நின்று அருள்பாலிக்கிறார். அவையாவன 1. காஞ்சிபுரம் - நிலம் - ஏகம்பநாதர், 2. திருவனைகாவல் - நீர் - ஜலகண்டீஸ்வரர், 3. திருவண்ணாமலை - நெருப்பு - அண்ணாமலைநாதர், 4. காளஹஸ்தி - வாயு - காளத்திநாதர், 5. சிதம்பரம் - ஆகாயம் - நடராஜர். அகவே பஞ்சபூத ஆற்றலில் உண்டாக்கப்பட்டு இயங்கும் மனிதன், தாம் வாழும் காலத்தில் பஞ்ச இந்திரியங்களால் (ஐந்து புலன்களால் - மெய், வாய், கண், காது, மூக்கு) ஆகியவற்றின் மூலியமாக தூண்டப்பட்டு தன் புலன்களால் இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் பிறருக்கு தீங்கு நேரும் பொது பாவங்கள் - கர்மவினைகள் உண்டாகிறது. எவ்வகையில் பாவம் செய்தோமோ அவ்வகையில் தானே அதனை தீர்க்க முடியும். பஞ்ச பூதங்களால் - பஞ்ச இந்திரியங்களால் தோன்றிய பாவத்தை - பஞ்ச லிங்கங்கள் அல்லவா தீர்க்க முடியும். மேலும் ஒரு முக்கிய விஷயத்தை அலசுவோம்.


                           இறைவனுக்கு ஐந்து விதமான சேவைகள் மூலம் நம் பாவங்களை நாம் போக்கிக்கொள்ள முடியும். அவையாவன 


1.யாதனம் - கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள் செய்தல்.

2.சிரவணம் - இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக கேட்டல்.

3. கீர்த்தனம் - இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.

4. பூஜார்தனம் - அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல், நைவேத்தியம் படைத்து பூஜை செய்தல்.

5. ஸ்துதி - இறைவனை புகழ்ந்து தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.


                                 இந்த ஐந்த விதமான சேவைகளை நாம் செய்து வர நம் கர்ம வினைகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் நல்கும். 



சனி, 5 ஜூலை, 2014

விரும்பிய பெண்ணை அடைய எந்திரம்

விரும்பிய பெண்ணை அடைய எந்திரம் 
மோகினி வசிய எந்திரம் 


இன்றைய காலத்தில் பல ஆடவர்கள் தாங்கள் விரும்பும் அல்லது காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவதில்லை. இதற்க்கு பல காரணங்கள் உண்டு, ஒன்று நாம் விரும்பும் பெண் நம்மை விரும்புவதில்லை, இரண்டாவதாக பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காமல் போவது, மூன்றாவதாக நம் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் என பட்டியல் நீண்டுகொண்டே போகும். 


இந்த சூழ்நிலைகள் எப்படி இருந்த போதிலும் தான் விரும்பும் பெண்ணை மனைவியாய் அடைந்தே தீர வேண்டும், நான் விரும்பும் பெண் இல்லாமல் எனக்கு வாழ்கையே இல்லை என்று மனதில் வைராக்யதொடு உள்ள வாலிபர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைவது தான் விரும்பிய பெண்ணை அடைய எந்திரம் என்று மேலே சொல்லப்பட்ட மோகினி வசிய எந்திரம் ஆகும்.


இந்த எந்திரத்துடன் அஷ்ட கர்மத்தில் வசியம் செய்யும் மூலிகைகளை பற்றி சொல்லியிருந்தேன், அதில் ஸ்திரி வசியம் என்னும் பெண் வசியத்துக்கு உண்டான நில ஊமத்தை, வெள்ளை விஷ்ணு கிராந்தி, மிளகு சாரணை, நத்தைச் சூரி, அழுகண்ணி, தொழுகண்ணி என்னும் மிக சிறந்த வசிய மூலிகைகளை வைத்து (மூலிகைகளை அதற்க்கு உண்டான சரியான வேளையில் காப்பு கட்டி, சாபம் போக்கி, உயிர் கட்டு மந்திரம் சொல்லி பறித்தால் மட்டுமே பலன்தரும்) முறைப்படி 1,00,008 மந்திர உருவேற்றி அணிந்து கொள்ள நாம் விரும்பும் பெண் நம்முடன் வந்து சேருவாள், இந்த அற்புத பலன் தருவது விரும்பிய பெண்ணை அடைய எந்திரம் - மோகினி வசிய எந்திரம்.

வெள்ளி, 4 ஜூலை, 2014

வாழ்வில் வெற்றி தரும் ராசிகளுக்கு உண்டான எந்திரங்களும் மூலிகையும்

வாழ்வில் வெற்றி தரும் ராசிகளுக்கு உண்டான எந்திரங்களும் மூலிகையும் :


                                                   வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என்றே ஒவ்வொரு மனிதனும் உழைத்துக்கொண்டு இருக்கிறான். மலையளவு நாம் உழைத்தாலும் கடுகளவாவது அதிர்ஷ்டம் வேண்டும் என்கிறது ஒரு முதுமொழி, அப்படி அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவது ஒவ்வொரு ராசியினருக்குமான யந்திரமும் அதற்க்கு உண்டான மூலிகைகளும் ஆகும். இந்த எந்திரங்களை உரிய தகட்டில் எழுதி ஒரு இலட்சம் மந்திர உருவேற்றி தாயத்தில் அடைத்து கழுத்தில் அணிந்துகொள்ள சகல காரியங்களும் வெற்றியடையும். கீழே எந்திரங்களும் அதற்க்கு உண்டான மூலிகைகளும் 12 ராசிகளுக்கும் தரப்பட்டுள்ளது.


1.மேஷம் :

பால ஷண்முகா எந்திரம் 


வைகுண்ட மூலிகை 




                                                     மேஷம் இராசியில் பிறந்தவர்கள் பால ஷண்முகா எந்திரம் எழுதி வைகுண்ட மூலிகை என்னும் தும்பை செடிக்கு ஞாயற்று கிழமையும் அஷ்டமியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.




2.ரிஷபம் :

மஹா லக்ஷ்மி எந்திரம் 




அம்மன் பச்சரிசி 


                                                      ரிஷப இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ மஹா லக்ஷ்மி எந்திரம் எழுதி அம்மன் பச்சரிசி மூலிகை செடிக்கு வளர்பிறை செவ்வாய் கிழமை குரு ஹோரையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.




3.மிதுனம் 


ஸ்ரீ தன ஆகர்ஷண எந்திரம் 

அற்ற இலை ஒட்டி 



                                  மிதுன இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ தன ஆகர்ஷண எந்திரம் 
எழுதி அற்ற இலை ஒட்டி மூலிகை செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமை நவமி திதியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.



4.கடகம் :

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி எந்தரம்
 

சிவப்பு நத்தைச்சூரி 


                              கடக இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி எந்திரம் 
எழுதி சிவப்பு நத்தைச்சூரி மூலிகை செடிக்கு தேய்பிறை புதன்கிழமை நவமி திதியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.



5.சிம்மம் :


சிதம்பர சக்கர எந்திரம் 


வெள்ளை விஷ்ணு கிராந்தி 



                                      சிம்ம இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ சிதம்பர சக்கர எந்திரம் 
எழுதி வெள்ளை விஷ்ணு கிராந்தி மூலிகை செடிக்கு வளர்பிறை ஞாயற்றுக்கிழமை நாளில் சூர்யோதய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.


6.கன்னி :

ஸ்ரீ சுதர்ஷன எந்திரம் 

கருந்துளசி 


                                     கன்னி இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ சுதர்சனசக்கர எந்திரம் 
எழுதி வெள்ளை கருந்துளசி மூலிகை செடிக்கு வளர்பிறை வெள்ளிக்கிழமை நாளில் சூர்யோதய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.


7.துலாம் :

ஸ்ரீ சூலினி எந்த்ரம் 

செந்நாயுருவி 

                                                துலாம் இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ சூலினி எந்திரம் 
எழுதி செந்நாயுருவி மூலிகை செடிக்கு வளர்பிறை செவ்வாய்க்கிழமை நாளில் ரோஹிணி நட்சத்திரமும் கூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.


8.விருச்சிகம் :

பால ஷண்முக சடாச்சர எந்தரம் 

தலைச்சுருளி 

                                                         விருச்சிகம் இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ பால ஷண்முக சடாச்சர எந்திரம் எழுதி தலைச்சுருளி மூலிகை செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமை நாளில் பூரட்டாதி நட்சத்திரமுமகூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.


9.தனுசு :

ஸ்ரீ தனாகர்ஷன குபேர எந்த்ரம் 

சிவனார் மூலி 

                           தனுசு இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ தனாகர்ஷன குபேர எந்திரம் 
எழுதி சிவனார் மூலி மூலிகை செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமை நாளில் ஏகாதசி திதியும் கூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.


10.மகரம் :

ஸ்ரீ கால பைரவ எந்த்ரம் 

யானை வணங்கி 

                                       மகரம் இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ கால பைரவ எந்திரம் 
எழுதி யானை வணங்கி மூலிகை செடிக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.


11.கும்பம் :

ஸ்ரீ கணபதி எந்த்ரம் 

தகரை 

                                               கும்பம் இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ கணபதி எந்திரம் 
எழுதி தகரை மூலிகை செடிக்கு வைகாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.


12.மீனம் :

ஸ்ரீ தனாகர்ஷண குபேர எந்த்ரம் 

குப்பை மேனி 

                              மீன இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ தனாகர்ஷண குபேரஎந்திரம் 
எழுதி குப்பை மேனி மூலிகை செடிக்கு சூரிய கிரகண நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

              மேற்படி எந்திரங்கள் உரிய மூலிகைகளுடன் வைத்து ஒருலட்சம் உருவேற்றப்பட்ட தாயத்துகள் நமது ஸ்ரீ விருட்ச பீடத்தில் கிடைக்கும்.

பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்



                                      பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்



"ஓம் தத்புருஸாயாவித்மஹேசக்கரதுண்டாய திமஹி தந்நோ நந்திப்ரசோதயாத்"
"ஓம் தத்புருஸாயாவித்மஹேமஹாதேவாயதிமஹி தந்நோ ருத்ரப்ரசோதயாத்"


"பஞ்ச பூத நாதேனே போற்றி
சிதம்பர ஆகாய நாதேனே போற்றி
காளகஸ்தி வாயு நாதேனே போற்றி
காஞ்சி ஏகாம் பரேஸ்வரே நிலம் நாதேனே போற்றி
திருவானை காவல் நீர் நாதேனே போற்றி
திருவண்ணாமலை அக்கினி நாதேனே போற்றி"



பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்:


1. அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம்-623 526:
குறிப்பு: கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகிப்பது வழக்கம். இங்கு மட்டும் கடலில் எந்நாளும் என்நேரமும், நீராடலாம். ஆஞ்சனேயர் கொண்டு வந்த லிங்கத்திற்கும், சீதை மணலால் செய்த லிங்கத்திற்கும் ராமர் பூஜை செய்தது சிறப்பு.

2. அருள்மிகுமல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ சைலம் :
ஆந்திரா குறிப்பு: நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம்.


3. அருள்மிகுபீமசங்கரர்திருக்கோயில், பீமசங்கரம், மஹாராஷ்டிரம் :
குறிப்பு: கருவறைக்கு முன் நந்திக்கு பதில் ஆமை. அவசரப்படாமல் வழிபட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக.


4. அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில், திரியம்பகம்மஹாராஷ்டிரம். நாசிக் :
குறிப்பு: சுயம்பு லிங்கம். லிங்கக் கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறுகிறது. சிவனே மலையாக இருப்பதாக தலம், கோதாவரி உற்பத்திக்கும் ஸ்நானம்.


5. அருள்மிகு குஸ்ருணேஸ்வரர்திருக்கோயில், குஸ்ருணேஸ்வரம் மஹாராஷ்டிரம் :

குறிப்பு: அம்பிகை குங்குமப்பூவால் வழிபட்ட தலம். (குஸ்ருணம்-குங்குமம்) கருவறையின் சுவற்றில் அன்னையின் திருவுருவம் உள்ளது.


6. அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், ப்ராபாச பட்டினம் (விராவெல்) குஜராத் :
குறிப்பு: கடற்கரை தலம். சந்திரன் சாபம் தீர்த்த தலம். அமாவாசை கூடிய திங்கட்கிழமை தரிசனம் மிகவும் சிறப்பு. மிகச்சிறிய சுயம்பு மூர்த்தி


7. அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், ஓனண்டா-396 526, குஜராத்:
குறிப்பு: தெற்கு நோக்கிய லிங்கம். நாமதேவர் வணங்குவதற்காகத் திரும்பிய கோலம்.


8. அருள்மிகு ஓம்காரேஷ்வரர் (அமலேஸ்வரர்) திருக்கோயில், ஓங்காரம், மத்திய பிரதேசம்:
குறிப்பு: மலைமுகட்டில் சுயம்புலிங்கம். பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2000 லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விடப்பட்டவையே சாளக்கிராமங்களாக மாறியதாக வரலாறு.



9. அருள்மிகு மஹாகாளர் திருக்கோயில், உஜ்ஜயினி (அவந்தி )மத்திய பிரதேசம்:
குறிப்பு: கார்த்திகை பவுர்ணமி தரிசனம் விசேஷம். 5 அடுக்கு கோயில். தோல் வியாதிகளை நீக்கும் கோடித் தீர்த்தம்.



10. அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், சித்த பூமி (தேங்கர்) பீகார்:
குறிப்பு: பல மாநிலங்களில் வைத்தியநாதம் இருப்பதாகக் கூறினாலும் சிவபுராணத்தில் குறிப்பிட்டுள்ளது இதுவே. திருமாலின் லீலையால் ராவணன் கொண்டுவந்த லிங்கம் தங்கி விட்ட தலம்.



11. அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், காசி(வாரணாசி)-221 003, உத்திரப்பிரதேசம்:
குறிப்பு: இங்கு இறப்பவருக்கு ஈசனே தாரக மந்திரம் ஓதுகிறார். தாங்களே அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரி தரிசனம் விஷேசம். ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை த்ரிவேணியில் கரைப்பது வழக்கம்.


12. அருள்மிகு கேதாரேஸ்வரர் திருக்கோயில், கேதார்நாத், உத்திரப்பிரதேசம்:
குறிப்பு: இமயமலையில் சுயம்பு பனிலிங்கம். அம்மன் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம். 6 மாத மானிட பூஜை, 6 மாதம் தேவ பூஜை.



"ஓம் பூர்: புவஸ்வஹ
தத் சவிதுர் வரேண்யம்.
பார்கோ தேவஸ்ய தீமஹி
தியோயேந ப்ரயோதயாத்".

"ப்ரோ ராஜேஸே ஸாவதோம்
அம்பா சர்வ பாதா ப்ரஸமனம்
த்ரை லோக்யஸ்ய ஆகில்லேஸ்வரி
ஏவம் எவாத் தூஹாரம்அஸ்மத் வைர வினஸனம்":
"ஓம் வயநமசி சுவாஹா
ஓம் ஸ்ரீம் ஐம் கீலீம் சௌம் ஹரீம்
ஓம் யங் ய ந ம சி வ சர்வலோக வசி வசி சுவாஹா"!


"ஓம் ஓம் ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
.சிவ சிவசிவவசி வசிவசி
யங் யங்யங் வங்வங்வங்
நங் நங் நங் சிங் சிங் சிங்
மங் மங் மங் யங் வங்நங் சிங்மங்
யமநமசி சிவயநம நமசிவய
ஓம் ஓம் காப்பாய் காப்பாய் என் ஈசனே
காப்பாய் கட்டு கட்டு இது சர்வேஸன்
கட்டு கட்டு இது நமசிவயா கட்டு
ஓம் ஓம் ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் வசிய வசிய வசியஸ்ரீம் றீம் றீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம்
றீம் றீம் றீம்ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் சுவாஹா
ஓம் சிவசிவ ஓம்"



மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்:
"த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருஹ மிவ பந்தனாத் ம்ருத்யோர் மூஷியமா ம்ருதாத்"!



நீண்ட ஆயுள் பெற, மரண பயம் நீங்க ஸ்ரீ ருத்ரம்:
"நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம":



நைவேத்தியம்: வெண் பொங்கல், வடை, வெறும்சாதம்

அஷ்ட கர்மங்கள் செய்ய ஏற்ற நேரம்

அஷ்ட கர்மங்கள் செய்ய ஏற்ற நேரம் 


                                                         அஷ்ட கர்ம செயல்கள் என்னும் வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் ஆகிய செயல்களை செய்யும் போது அதற்க்கு உண்டான எந்திரங்களை எழுதி அதற்க்கு உரிய மூலிகைகளை வைத்து  அதற்க்கு உரியவண்ணங்களில் நூல் இழைகளால் பிணைத்து கட்டி எந்த அஷ்ட கர்ம செயல்களை செய்கிறோமோ அதற்க்கு உண்டான எண்ணெயில் அதற்க்கு உரிய திரி போட்டு தீபம் ஏற்றி அஷ்ட கர்மத்தில் அந்த கர்மம் செய்வதற்கு உண்டான திசையை பார்த்து அமர்ந்து அதற்குரிய மந்திரங்களை ஜெபம் செய்தல் வேண்டும், இது மட்டும் போதுமா என்றால் போதாது அந்த அஷ்ட கர்ம காரியங்களை எந்த நாள் நட்சத்திரம் திதி லக்னம் கூடும் வேளையில் செய்தால் பலிதமாகும் என்பதனை அறிந்து செய்தால் மட்டுமே அஷ்ட கர்ம செயல்கள் சித்தியாகும், இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி நினைத்த நேரத்தில் எல்லாம் செய்வதால் தான் பலருக்கும் அஷ்ட கர்மங்கள் சித்தியாவதில்லை. இதுவரை தனித்தனி கட்டுரைகளாக அஷ்ட கர்ம செயல்களுக்கு உண்டான உலோகம், மூலிகைகள், நூல் இழைகளின் எண்ணிக்கை, வர்ணம், எண்ணெய், திரி வகை, திசைகள் ஆகியவைகளை பற்றி சொல்லியிருக்கிறேன், இப்போது அஷ்ட கர்ம செயல்களை செய்வதற்கான காலங்களை ரோமரிஷி சித்தர் பாடல்களின் மூலம்   விளக்க உள்ளேன். முன் சொன்ன எல்லாவற்றையும் மனதில் கொண்டு இங்கே குறிப்பிடும் காலத்தில் அஷ்ட கர்மங்களை செய்தால் நிச்சயம் பலிதமாகும்.

"கூறினேன் ஞாயிறுஅதில் அசுபதியும் சஷ்டி 
குணமாக மிதுனமும் மோகனமேயாகும் 
தேறினேன் பரணியும் ஏகாதசி 
திரமான கடகமுமே ஸ்தம்பனமேயாகும் 
வாரினதோர் கார்த்திகையும் துதிகைதானும் 
வளமான சிங்கமது வேஷணமுமாகும் 
நூறினே னுரோகணியும் சத்தமியும் கூட்டி 
சுகமான கன்னியது பேதனமும் பாரே" 

பாடல் விளக்கம் : ஞாயற்றுகிழமை நாளும் அசுவினி நட்சத்திரமும் சஷ்டி திதியும் மிதுன லக்கினமும் கூடும் வேளை அஷ்ட கர்மத்தில் மோகனம் செய்வதற்கு உரிய காலமாகும், ஞாயற்றுகிழமை நாளும் பரணி நட்சத்திரமும் ஏகாதசி திதியும் கடக லக்னமும் கூடும் வேளையில் ஸ்தம்பனமும், ஞாயற்றுகிழமை நாளும் கார்த்திகை நட்சத்திரமும் துதிகை திதியும் சிம்ம லக்னமும் கூடும் வேளை வித்வேஷணமும், ஞாயற்றுகிழமை ரோஹிணி நட்சத்திரமும் சப்தமி திதியும் கன்னி லக்னமும் கூடும் வேளையில் பேதனமும் செய்ய அஷ்ட கர்ம காரியங்கள் நிச்சயம் பலிதமாகும்.

"பாரடா சீரிடமும் துவாதசியோடு 
பண்மையுள்ள துலாகோலும் உச்சாடனமே செய்யும் 
கூறடா ஆதிரையும் திரிகையும் சேர்ந்தால் 
குறியான விருச்சிகமும் மாரணமே செய்யும் 
தீரடா புனர்பூசம் அஷ்டமியுங் கூடில் 
செகம்புகழும் தனுசதுவும் வசியமாகும் 
சாரடா பூசத்தொடு திரயோதசி மகரம் 
சண்டாளா ஆகர்ஷணம் ஆகுந்தானே" 


பாடல் விளக்கம் : ஞாயற்றுகிழமை நாளும் மிருகசீரிடம் நட்சத்திரமும் துவாதசி திதியும் துலாம் லக்னமும் கூடும் காலம் உச்சாடனமும், ஞாயற்றுகிழமை நாளும் திருவாதிரை நட்சத்திரமும் திரிகை திதியும் விருச்சிகம் லக்னமும் கூடும் காலம் மாரணமும், ஞாயற்றுகிழமை நாளும் புனர்பூசம்  நட்சத்திரமும் அஷ்டமி திதியும் தனுசு லக்னமும் கூடும் காலம் வசியமும், ஞாயற்றுகிழமை நாளும் பூசம் நட்சத்திரமும் திரயோதசி திதியும் மகரம் லக்னமும் கூடும் காலம் ஆகர்ஷணம் செய்ய உடனே பலிதமாகும்.

இவ்வாறு ஒவ்வொரு கிழமைகளிலும் அஷ்ட கர்ம காரியங்களான வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் ஆகிய செயல்களை செய்ய உரிய நட்சத்திரம், திதி, லக்னம் இவற்றை சொல்லிச் சென்றுள்ளனர் அந்த காலங்களை அறிந்து செய்தால் மட்டுமே அஷ்ட கர்ம காரியங்களான வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் ஆகிய செயல்கள் ஜெயமடையும், மற்றபடி மனம் போன போக்கில் செய்யும் யாருக்கும் வெற்றிகள் தராது.

வியாழன், 3 ஜூலை, 2014

நவகிரக தோஷம் நீக்கும் பரிகாரம்




                                                                   நம்மில் பலர் பல ஜோதிடர்களை நாடிச் சென்று நம் ஜாதகத்தினை கட்டி பரிகாரம் கேட்டும் செய்தும், பல கோவில்களுக்கு சென்று பல பூஜைகளை செய்தும், நவரத்தின கற்களை அணிந்தும், பல எந்திரங்கள் மந்திரங்கள் செய்தும் வாழ்வில் ஒரு கடுகளவு கூட முனேற்றம் உண்டாகவில்லை என்பதை சொல்ல கேட்டிருக்கிறோம். பலரோ பிறந்த ஜாதகமே தெரியாமல் என்ன பரிகாரங்களை செய்வது என தெரியாமல் அடுக்கடுக்கான கஷ்டங்களையே வாழ்வில் அடைந்து வருவதினை காண்கிறோம். அப்படி தொடர்ந்து துன்பங்களை அடைந்து வருபவர்கள் அந்த துன்பங்கள் மாறி இன்பமான சந்தோஷமான ஒரு வாழ்வினை அனுபவிக்க வேண்டும் என்று ஏங்கி தவிப்பவர்களா நீங்கள் கவலையை விடுங்கள் உங்கள் வாழ்வும் மலர சர்வ சக்தி விருட்ச பீட ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் சொல்லும் எளிய பரிகார முறைகள் இதோ 

1. யார் அதிகாலையில் பிரம்ம முகூர்த்ததில் ( 4.30 மணி முதல் 6 மணி வரை ) குளித்து வீட்டில் விளக்கேற்றி தீப ஜோதி தரிசனத்தை பார்த்து வருகிறானோ அவனுடைய பாவங்கள் விரைவில் நீங்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

2. யார் தினமும் பசுவுக்கு அகத்தி கீரையை உணவாக கொடுத்து வாருகிறார்களோ அவர்களுடைய பாவங்களும் விரைவில் நீங்கும். பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்களும் அடக்கம்.

3. யாரொருவர் தொடர்ந்து அன்ன தானம் செய்து வருகிறார்களோ அவர்களின் பாவங்களும் விரைவில் தீரும்.

4. நீங்கள் எத்துனை பெரிய தனவந்தராக இருந்தாலும் இறைவன் அதனை பெரிதாக எண்ணுவதில்லை, மாறாக நீங்கள் இறைவனுக்காக என்ன உடல் உழைப்பை செய்தீர்கள் என்றே இறைவன் பார்க்கிறார். இறை ஸ்தலங்களில் நீங்கள் உடல் உழைப்பால் செய்யும் பணிகளால் உங்கள் பாவங்கள் விரைவில் நீங்கும்.

5. நீங்கள் பிறந்த நட்சத்திர நாளன்று உங்களுக்கு உண்டான நட்சத்திர விருட்சத்திற்கு முன் விளக்கேற்றி நட்சத்திர காயத்திரி மந்திரம், அதி தேவதை பிரத்யதி தேவதை மந்திரம் சொல்லி வணங்கி விருட்சத்தினை சுற்றி வந்து வழிபட்டு, பின் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான விருட்சங்களையும் வலம் வந்து வழிபட சகல தோஷங்களும் நீங்கும். சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

6. நவ தானியங்களை பரிகாரம் செய்யும் நாளுக்கு முதல் நாள் இரவு தண்ணீரில்  ஊறவைத்து பரிகாரம் செய்யும் நாள் நவ தானியம் ஊறவைத்த தண்ணீரை விருட்சங்களுக்கு ஊற்றி, ஊறவைத்த நவதானியதுடன் வெல்லம் சேர்த்து ஆட்டி அதனை பசு மாட்டிற்கு உண்ண கொடுத்து பசு உண்ணும் போது பசுவை 9 முறை வலம் வந்து வணங்க தோஷங்கள் நீங்கும்.

7. ஆலய திருப்பணிகளில் நம்மால் இயன்ற பொருள் உதவிகளை செய்து வர எல்லா வகையான பாவங்களும் நீங்கும்.

மேற்கண்ட பரிகாரங்களை தொடர்ந்து செய்துவர நம்மை வாட்டும் துன்பங்கள் நீங்கி வாழ்வில் புது வசந்தம் உண்டாகும், இன்பம் பெருகும், நல்லவைகள் நடக்கும், தொழில் வளமும் செல்வ வளமும் பெருகும். வாழ்க வளமுடன் !

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க