ஞாயிறு, 18 மே, 2014

அஷ்ட கர்ம செயல்களுக்கான உலோகங்கள்

                 

                                             சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த உலோகங்களில் எந்திரங்கள் எழுதி அந்த காரியங்களை செய்தால் உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு உலோகங்களில் எந்திரங்களை எழுதி மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான எந்திரங்களை எந்த உலோகங்களில் எழுதினால் ஜெயம்தரும் என்று பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அஷ்ட கர்ம பெயர்                எந்திரங்கள் எழுதவேண்டிய உலோகங்கள்  



1. வசியம்                            -      காரீயம்  




2. தம்பனம்                         -      செம்பு   




3. மோகனம்                       -     வங்கம்  




4.  உச்சாடனம்                   -     வெள்ளீயம் 




5. பேதனம்                           -     இரும்பு  




6. ஆகர்ஷணம்                  -     தங்கம்  




7. வித்வேஷனம்               -    குருத்து ஓலை 




8. மாரணம்                           -    வெள்ளி 




          மேலே சொல்லிய உலோகங்களில் அந்தந்த காரியங்களுக்கு உண்டான எந்திரங்களை வரைந்து மந்திரங்களை ஜெபம் செய்ய அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம்.


அஷ்ட கர்ம செயல்களுக்கான எண்ணைகள் மற்றும் திரி வகைகள்


                    

                                             சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த எண்ணையில் எந்தவிதமான திரிகளை போட்டு விளக்கேற்றி அந்த காரியங்களை செய்தால் உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு எண்ணெயில் ஏதோவொரு திரி போட்டு விளக்கேற்றி மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான எண்ணைகள் மற்றும் திரி வகைகளை  பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அஷ்ட கர்ம பெயர்                எண்ணெய் & திரி 



1. வசியம்                            -      காராம் பசு நெய் & தாமரை நூல் திரி 




2. தம்பனம்                         -       ஆதளைக்கொட்டை எண்ணெய் & பஞ்சுத்திரி  




3. மோகனம்                       -       நல்லெண்ணெய் & கன்னி நூல் திரி 




4.  உச்சாடனம்                   -       புங்கெண்ணெய் & இலவம்பஞ்சு திரி 




5. பேதனம்                           -       புன்னைக்கொட்டை எண்ணெய் & துணித்திரி 




6. ஆகர்ஷணம்                  -       எரண்டத்து எண்ணெய் & வெள்ளெருக்கன் திரி 




7. வித்வேஷனம்               -        பசு+ஆடு+பன்றி நெய் & தாமரை நூல்திரி   




8. மாரணம்                           -        வேப்பெண்ணெய் & வேலிப்பருத்தி திரி 




          மேலே சொல்லிய எண்ணெய் மற்றும் திரி வகைகளை போட்டு விளக்கேற்றி அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம்.



அஷ்ட கர்மங்களுக்கு உண்டான நூல் இலைகளின் எண்ணிக்கை


"தருவர வக்கர சக்கர சக்தி 
பருவ முதிராத பாலிகை கன்னி 
இருவின நூலால் ஏற்கும் வினைக்கு 
மருவிய கருமம் வகைவகை தானே" 

அஷ்ட கர்ம செயல்கள் என்னும் வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் ஆகிய செயல்களை செய்யும் போது அதற்க்கு உண்டான எந்திரங்களை எழுதி அதற்க்கு உரிய வண்ணங்களில் நூல் இழைகளால் பிணைத்து கட்ட வேண்டும் என்பதை சித்தர்கள் குறிப்பிட்டு சென்றுள்ளனர். அந்த நூல்கள் எப்படி யாரால் நூற்க்கப்பட வேண்டும், அந்த நூல்கள் எத்தனை இழைகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதும் மிகவும் முக்கியம், இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மனம் போன போக்கில் எந்திரங்களை எழுதி அதனை தாயத்தில் அடைத்து தருவதால் எந்த பலனையும் நாம் அடைய முடியாது, மேலே சொல்லப்பட்ட பாடலின் படி வரங்களை தருகின்ற எந்திரங்களை இறுத்தி கட்டும் நூலானது வயதுக்கு வராத கன்னிப் பெண் நூற்று அந்த நூலை அஷ்ட கர்ம செயல்களுக்கு ஏற்ற இழை கணக்கு அறிந்து கட்டுவதால் அஷ்ட கர்ம காரியங்கள் ஜெயமடையும் என்பதனை குறிப்பிடுகிறது.

"வகையாகும் வசியம் ஆகருணைக்குத் 
தொகையா மிரண்டிழை சொற்ற மோகனம் 
பகையாகும் ஏடனை பற்றுநூல் மூன்றாம் 
புகையாகும் தம்பனம் போக்குநால் நூல்தானே.
நூலஞ்சு பேதனம் ஆறிழை மாரணம் 
காலோன்றைக் கட்டி கருத்தொக்கச் சூழ்ந்தபின்  
பாலொன்று மென்மொழிப் பங்கயச்சத்திக்கு
சேலொன்று  மோமங்கள் செய்மந்திரமே".

மேற்கண்ட பாடலின் படி அஷ்ட கர்ம செயல்களான வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் 
 ஆகிய காரியங்களுக்கான நூல் இழை கணக்கினை நாம் தெளிவாக அறியமுடிகிறது. அவையாவது :

வசியம் - 2 இழை, மோகனம் - 3 இழை, தம்பனம் - 4 இழை, உச்சாடனம் - 4 இழை, ஆகர்ஷணம் - 2 இழை, வித்வேஷனம் - 3 இழை, பேதனம் - 5 இழை, மாரணம் - 6 இழை  இவற்றை தெளிவாக கவனத்தில் கொண்டு அந்தந்த எந்திரங்கள் எழுதும்போது அதற்குரிய இழை கணக்கில் அதற்குரிய வண்ண நூலால் கட்டி மந்திரங்களை உருவேற்றினால் அந்த காரியங்கள் ஜெயமுடன் முடியும்.

சனி, 17 மே, 2014

புத்திர பாக்கியம் தரும் விருட்சம்



                                                  புத்திர பாக்கியம் வேண்டி ஏங்கி தவிக்கும் தம்பதியினர் பலர், இவர்களின் புத்திர பாக்கிய வேண்டுதலை உடனே நிறைவேற்றும் ஒரு பரிகார மரம் ஒன்று உண்டு என்று விருட்ச சாஸ்திரம் கூறுகிறது. இம்மரம் நமது சர்வ சக்தி விருட்ச பீடத்திலும் நட்டு சாஸ்திர முறைப்படி வளர்க்கப்பட்டும் வருகிறது. உலக மக்களின் புத்திர பாக்ய வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக புத்திர தோஷ பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த அபூர்வ சக்தி கொண்ட தெய்வீக விருட்சம் இலந்தை மரம் எனும் முட்கள் நிறைந்த சிறு மரம். இம்மரத்தில் சந்தான கணபதியும், மகாலட்சுமியும் ஒருங்கே வாசம் செய்வதால் இம்மரத்தை வணங்கும் போது புத்திரபாக்கியத்தில் உண்டாகும் வினைகளை விநாயகர் தீர்த்து அருள, லட்சுமியும் தனது அம்சங்களை பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டாக அருள்பாலிக்கிறார்.










இந்த மரத்தினை அதிகாலையில் சந்தன லட்சுமி மந்திரத்தை 16 முறை சொல்லி வலம்வந்து, அதன் இலைகளை ஒரு கைப்பிடி அளவு பறித்து அத்துடன் 10 மிளகு சேர்த்து அரைத்து, பெண்கள் மாத விலக்கான மூன்று நாட்களும் சாப்பிட கருவறையை சுத்தப்படுத்தி கரு உண்டாக செய்கிறது.


ஆல மரம் :


இந்த தெய்வீக சக்தி உடைய விருட்சம் சிவ பெருமானின் அம்சம் ஆகும். இந்த மரத்தில் இருந்து சாத்வீக கந்த அதிர்வுகள் வேளியறுகின்றன. இந்த விருட்சத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதில் கைகூடும். இந்த விருட்சம் ஆண்மையை அதிகரிக்க செய்யும். குழந்தை பாக்கியம் இல்லாத ஆண்கள் இம்மரத்தை முறைப்படி பூஜித்து வணங்கினால் புத்திரபாக்கியம் உடனே கிடைக்கும். கணவன் - மனைவி சேர்ந்து இந்த பரிகாரத்தை செய்யவும்.




ஒரு வியாழக்கிழமையை தேர்வு செய்து அன்று சர்வ சக்தி விருட்ச பீடத்தில் உள்ள ஆல விருட்சதிக்கு புத்திர தோஷ பரிகாரம் செய்யவும் . பரிகாரம் செய்வதற்கு முதல் நாள் இரவே நவ தானியத்தை வாங்கி தண்ணீரில் ஊறவைத்து பரிகாரம் செய்யும் நாள் ஊறவைத்த தண்ணீரை விருட்சதிக்கு ஊற்றி பரிகாரம் செய்து கொண்டு, ஊறவைத்த தானியத்தை வெல்லம் சேர்த்து அரைத்து பசுவுக்கு கோபூஜை செய்து உண்ண கொடுத்தல் உங்கள் கர்ம விணைகள் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும். இம்மரம் வெளியிடும் காந்த அலைகள் உடலுக்கு நல்ல வலிமை தரும். இம்மரம் வெளியிடும் கற்றை சுவாசம் செய்தாலே உடல் நோய்கள் நீங்கும்.





வியாழன், 15 மே, 2014

ஜோதிடம் கால புருஷ இராசிகள்



             
                                                 காலப் புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம, மோட்ச இராசிகள் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் செய்த பாவ புண்ணியங்கள் எந்த வகையில் யாருக்கு செய்தோம். அதன் விளைவாக இந்த பிறவியில் நாம் என்ன யோகங்களை அல்லது தோஷங்களை அனுபவிக்க போகிறோம் என்பதனை இந்த காலப்புருஷ இராசிகளை கொண்டு நாம் அறிய முடியும். இதில் எந்த இராசிகள் எந்த தத்துவத்தை குறிக்கும் என்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.


தர்ம இராசிகள் : மேஷம்,சிம்மம்,தனுசு இராசிகள் 

தர்மத்தில் இருவகை உண்டு. அவை நல்ல தர்மம், கெட்ட தர்மம். உதாரணமாக ஒரு கோவிலில் திருவிழா நடக்கிறது, அந்த விழாவில் ஒருவர் அன்ன தானம் செய்தார் இது நல்ல தர்மம். ஒருவர் ஆபாச நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார் இது கெட்ட தர்மம். அதாவது நாம் செய்யும் தர்மம் ஒருவரை வாழ வைப்பதாக, நல்வழி படுத்துவதாக அமைந்தால் அது நல்தர்மம் அதனால் அவர் நல்ல பலன்களையும் ஜாதகத்தில் யோகங்களையும் பெற்று வாழ்வார். அதேபோல் மற்றவரை தீய வழியில் செலுத்தும் ஆபாச நடனம் நடத்தியவர் அதன் பலனாக கெடு பலன்களையும் ஜாதகத்தில் அதற்குரிய தோஷங்களையும் பெற்று வாழ்வில் துன்பப்படுவார்.

கர்ம இராசிகள் : ரிஷபம், கன்னி, மகரம் இராசிகள் 

கர்மம் என்பது நாம் செய்யும் தொழிலை குறிக்கும், பிறருக்கு தீங்கு தராத வண்ணம் நமது தொழிலை செய்தால், நாம் செய்யும் தொழிலின் வாயிலாக பிறருக்கு நன்மைகள் செய்தால், நாம் செய்யும் தொழிலை நியாய தர்மத்துடன் செய்தால் அதன் பலனாக நல்ல ஜாதக யோகத்தினையும், அதனால் நல்ல பலன்களையும், நல்ல சந்தோஷமான வாழ்வினையும் அடையலாம். அதேபோல் தர்ம நியாங்களை மறந்து நாம் செய்யும் தொழிலால் பிறருக்கு தீமைகளை செய்து பணம் ஈட்டினால் அதன் விளைவாக கெடு பலன்களையும், ஜாதக ரீதியில் கொடிய தோஷங்களையும் பெற்று துன்பப்பட்டு வாழவேண்டி நேரும்.

காம இராசிகள் : மிதுனம், துலாம், கும்பம் இராசிகள் 

காமம் என்பது ஆசையை குறிப்பதாகும். நம் ஆசைகளிலே நல்லதும் உண்டு, தீய ஆசைகளும் உண்டு. நான் நியாயமான வழியில் தர்ம வழியில் உழைத்து பெரும் செல்வம் ஈட்டி என் குடும்பத்தை நல்ல விதமாக வாழ வைப்பேன் என்பது நல்ல காமம் (ஆசை). நான் எப்பாடு பட்டாவது அடுத்தவன் மனைவியை அடைந்தே தீருவேன் இது கெட்ட காமம் (ஆசை).

மோட்ச இராசிகள் : கடகம், விருச்சிகம், மீனம் இராசிகள் 

நம்மை பெற்றெடுத்த தாய் - தந்தை, பாட்டன் - பாட்டி போன்ற பெரியோர்களை அவர்கள் வாழும் காலத்தில் நல்ல விதமாக வாழவைத்து, அவர்கள் இறக்கும் போது உரிய இறுதி சடங்குகளை செய்து, அவர்கள் இறந்த பிறகும் செய்ய வேண்டிய திதி தர்ப்பணம் முதலிய காரியங்களை செய்வது அவர்கள் மோட்சமடைய வழிவகையான நல்மோட்சம். அதுவே பெரியோர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களை உதாசீனப் படுத்துவது, உன்ன உணவுஇன்றி தவிக்கவிடுவது, அவர்களுக்கு உண்டான மருத்துவ செலவுகளை செய்யாமல் நோயால் துன்பமடைய செய்வது, அவர்கள் இறக்கும் போது உரிய இறுதி சடங்குகளை செய்யாமல் விடுவது, இறப்புக்கு பின்பு திதி தர்ப்பணங்களை செய்யாமல் விடுவது போன்ற செயல்களை செய்வதால் நம் முன்னோர்களின் ஆன்மா மோட்சமடையாமல் இருக்க வழிவகை செய்வதாகும் இதனால் நம் வாழ்வில் துன்பங்கள் தோன்றி வாட்டும் இதுவே துர்மோட்சம் ஆகும்.

மேலே கண்ட இராசிகளில் உள்ள கிரகங்களின் தன்மையை பொறுத்து நாம் கடந்த பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இந்த பாவங்களில் தீய கிரகங்கள் அமர்ந்து தோஷங்களை தருமானால் நாம் கடந்த பிறவியில் அந்த இராசிகளின் காரக பலனில் நாம் செய்த பாவம் என்று அறிக. அந்த பாவங்களால் உண்டாகி நம்மை வாட்டும் தோஷங்களை தகுந்த பரிகாரங்கள் செய்து சரிப்படுத்தி கொள்ளலாம்.


ஜோதிடம் கால புருஷ தத்துவம்




                                               ஜோதிட சாஸ்திரப்படி மிகப் பெரிய பங்கு வகிப்பது காலப்புருஷ தத்துவம் ஆகும். நாம் முன் பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே இந்த பிறவியில் நாம் அடையும் நன்மை தீமைகளுக்கு காரணம். நான் கடந்த பிறவிகளில் யாருக்கு எந்த விதத்தில் பாவங்களையோ, இல்லை புன்னியங்களையோ செய்தோம், அதன் வாயிலாக இந்த பிறவியில் நாம் அந்த வினைப்பயனை எவ்விதத்தில் அனுபவிக்க போகிறோம் என்பதனை நமக்கு ஜோதிடத்தில் நமக்கு தெள்ளத் தெளிவாக கண்ணாடி போல காட்டுவது காலப்புருஷ தத்துவம் ஆகும்.

             ஜோதிட சாஸ்திரம் 12 இராசிகளையும் சர, ஸ்திர, உபய இராசிகள் என்று வகுத்துள்ளது. இதில் சர இராசிகள் - மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகும். ஸ்திர இராசிகள் - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகும். உபய இராசிகள் - மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகும். இதில் சர இராசி இந்த பிறவியின் தன்மையை காட்டும், ஸ்திர இராசிகள் சென்ற பிறவியில் நாம் செய்த நன்மை தீமைகளை காட்டும். உபய இராசிகள் அடுத்த பிறவியில் நாம் அனுபவிக்க இருக்கும் நன்மை தீமைகளை காட்டும். ஒரு ஜாதகர் தான் பிறந்த லக்னத்தை கொண்டு தனக்கு நடக்கும் பலன்களை எடை போட முடியும். சர லக்னத்தில் பிறந்தவர்கள் இந்த பிறவியில் செய்யும் நன்மை தீமைகளின் பலனை இந்த பிறவியிலேயே அனுபவிப்பர், ஸ்திர லக்னத்தில் பிறந்தவர்கள் போன பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் பலனை இந்த பிறவியில் அனுபவிப்பர், உபய லக்னத்தில் பிறந்தவர்கள் இந்த பிறவியில் செய்யும் பாவ புண்ணியங்களின் பலனை அடுத்த பிறவியில் அனுபவிப்பர், என்று காலப் புருஷ தத்துவத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது, இதனால் தான் நல்லவர்களுக்கு கேட்ட பலனும், துன்பமான வாழ்வும், அதுபோல கேட்டவர்களுக்கு நல்லபலனும் இன்பமான வாழ்வும் அமைந்துவிடுகிறது. இந்த காலப்புருஷ தத்துவம் என்பது அனைவருக்கும் பொதுவானது மாற்ற இயலாத ஒன்றாகும். காலப்புருஷ தத்துவப்படி நமது ஜாதகத்தினை ஆராய்ந்து நாம் அடைய உள்ள நல்ல தீய பலன்களை அறிந்து கொள்ளலாம். நாம் காலப்புருஷ தத்துவப்படி கேடுப்பலனை அடையவேண்டி வந்தால் அதற்க்கான பரிகாரங்களை செய்துகொள்வதன் வாயிலாக நம் கஷ்டங்களை சிரமங்களை போக்கிக்கொள்ளலாம், நல்ல பலன்களை அதிகப்படுத்தி கொள்ளலாம், இந்த காலப்புருஷ தத்துவத்தினை மாற்றும் பரிகாரங்கள் ஒருநாளில் செய்துகொள்வதல்ல, தகுந்த குருவின் ஆலோசனைப்படி நீங்கள் தொடர்ந்து செய்துவந்தால் மட்டுமே இதன் பலனை அடைய முடியும்.

ஞாயிறு, 11 மே, 2014

விளக்கேற்றும் பெண்ணின் பெருமை




                           திருமணமாகி கணவன் இல்லம் வரும் பெண்ணை குத்து விளக்கேற்ற சொல்வது நமது முன்னோர் வைத்து சென்ற மரபு காரணம் என்னெவன்றால் குத்து விளக்கில் ஐந்து முகங்கள் உண்டு. ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துகிறது.அவை அன்பு, மனஉறுதி, சகிப்பு தன்மை, நிதானம், சமேயாஐித புத்தி ஆகும். இந்த தன்மையை உணர்த்தும் குத்து விளக்கை ஏற்றும் பெண்ணும் அந்த ஐந்து தத்துவங்கைள புரிந்து கொண்டு தானும் தான் சார்ந்துள்ள தனது குடும்பத்தையும் குலவிருத்தி செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள்.

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க