ஞாயிறு, 11 மே, 2014

கிரகணம் ஜோதிட பார்வை



                                                      கிரகணம் என்றாலே மக்களின் அச்சம் இன்னும் தீரவில்லை. இதனை பற்றி பல நேயர்கள் என்னை எழுதும்படி கேட்டார்கள். சூரிய கிரகணம் தோன்றினால் மனிதர்கள் மட்டுமல்லாது எல்லா உயிர்னங்கள் மீதும் உடல் ரீதியான மாற்றங்கள் உண்டாகின்றன. அதே போல் சந்திர கிரகணத்தின் போது உயிரினங்களின் மனநிலை பதிக்கப்படுகிறது. கிரகண காலம் நமக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும், நம் முன்னோர்களான பிதுருக்களுக்கும் மிக முக்கியமான புன்னியகலமாகும்.

         
            இந்த கிரகண நேரத்தில் மனிதன் செய்யக் கூடாதவை என சாஸ்த்திரம் சொல்பவை. உணவு சாப்பிட கூடாது, உடலுறவு வைத்துக் கொள்ள இந்த நேரத்தில் மனிதனின் இந்திரியங்கள் பாதிக்கும். அகவே இதனை தவிர்ப்பது நல்லது. சூரிய கிரகணத்தை நேருக்கு நேர் கண்களால் பார்க்க கூடாது. கர்பிணி பெண்கள் கிரகணம் படும்படி வீட்டை விட்டு வெளிவர கூடாது. அப்படி வந்தால் பிறக்கும் குழந்தையின் உடலில் ஊனங்கள் உண்டாகும்.
        
                   இந்த கிரகண காலத்தில் செய்ய வேண்டியவை என்னவென்றால், சூரிய கிரகணம் பிடிக்கும் நேரமும், சந்திர கிரகணம் விடும் நேரமும் புனித நீராடி இறந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இதன் பலன் உடனே நம் பித்ருக்களை சென்றடைந்து, நம் பித்ரு தோஷங்கள் நீங்கும். கிரகணம் விலகும் நேரம் கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்யலாம்.
          

பிரம்மஹத்தி தோஷம் விளைவும் பரிகாரமும்





                                       பிரம்மஹத்தி தோஷம் என்பது ஆசிரியர்களுக்கு உத்தம குருவுக்கு பிராமணர்களுக்கு எந்த வழியிலேனும் துரோகம் செய்வதாலும், பலரின் சொத்துக்களை நேர்மையற்ற வழியில் அபகரித்ததாலும், கன்னி பெண்ணை ஏமாற்றி கற்பை சூரையாடிவிட்டு பின் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாலும், தன்னுடைய பதவி அதிகாரத்தை பயன்படுத்தி பிறரை இம்சித்ததாலும், நல்ல பாம்பை வெள்ளிக்கிழமை தினம் அடித்து கொன்ற பாவத்தினாலும் ஏற்படுகிறது, இந்த தோஷம் சென்ற பிறவியில் உண்டானதா, இந்த பிறவியில் உண்டானதா என்பதை உங்கள் பிறப்பு ஜாதகம் மூலம் கண்டறியலாம்.
       ஜோதிட சாஸ்த்திரத்தின் படி குருவை சனியை எந்த  விதத்தில் தொடர்பு கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் உண்டு, குரு சனி சேர்க்கை, பார்வை, குரு சனி சாரம் பெறுதல், சனி குரு சாரம் பெறுவது, குரு சனி பரிவர்த்தனை பெறுவது முதலிய அம்சங்கள் பிரம்மஹத்தி தோஷத்திற்கான  கிரக நிலைகள் ஆகும்.


         இந்த பிரம்மஹத்தி தோஷத்தின் விளைவுகளாவன :-
                                                                                                                       தீராத நோய்கள் உடலில் ஏற்பட்டு வாட்டும், மணவாழ்கையில், புத்திர பாக்யம் உண்டாவதில், மாங்கல்ய பாக்யத்தில் பாதிப்புகள் உண்டாகும்.  தொழில் பாதிப்பு, தீராத கடன்கள் ஏற்பட்டு வாட்டும். செய்யாத தவறுகளுக்கு தண்டனை அடைவது, மன நிம்மதியின்மை, புத்தி சுவாதீனம் இல்லாமல் போவது என இதன் பாதிப்புகள் தோன்றி வாழ்வை சீர்குலைக்கும்.
       

          பரிகாரம் :
                             தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் கோவில் சென்று தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்யவும் . கோவை மாவட்டம் பாலமலை சென்று குளத்தில் நீட்டி செங்கோதை, பூங்கோதை அம்மன்    சமேத அரங்கநாதரையும் வணங்க தோஷம்  நீங்கும். இராமேஷ்வரம்  சென்றும் பரிகாரம் செய்து  கொள்ளலாம்.                              

பிரேத சாபம் ஜோதிட பார்வை




                                      ஒரு ஜாதகத்தில் பிரேத சாபத்தினை மாந்தியை கொண்டு  தெரிந்துகொள்ளலாம். மாந்தியின் பார்வை பெற்ற கிரகங்களும், மாந்தியுடன் சேர்ந்த கிரகங்களும் பிரேத சாபத்தினை பெறும். பிரேத சாப்பத்தை பற்றி முன்பே எழுதியுள்ளேன். எனவே அதை ஜாதகத்தில் தெரிந்துகொள்வது எப்படி என பார்ப்போம்.
          உங்களின் ஜாதகத்தில் நான்காம் பாவத்தில் மாந்தியும் பாதகாதிபதியும் சேர்ந்திருந்தாலோ, நான்காம் அதிபதி வேறு எந்த பாவத்திலாவது மாந்தியுடன், பாதகாதிபதியுடன் சேர்ந்தாலோ உங்களுக்கு பிரேத சாபம் உண்டு. அந்த பிரேதம் எவ்வகையில் இறந்து சாபத்தை உண்டாக்கியது என்பதையும் ஜாதகத்தில் அறியலாம்.
        மாந்தியுடன் செவ்வாய் சேர்ந்து தோஷம் ஏற்பட்டால் அந்த மரணம் நெருப்பு, ஆயுதம் அல்லது விபத்தால் இறந்தது., மாந்தி சனியுடன் சேர்ந்து தோஷம் ஏற்பட்டால் தூக்கில் அல்லது நோயில் இறந்தது. மாந்தியும் இராகுவும் சேர்ந்து தோஷத்தை தருமானால் பிரேதம் விஷத்தால் இறந்தது.

       இவ்வகை பிரேத சாபம் நீங்க நீங்கள் வசிக்கும் வீட்டில் மகா ம்ருத்யுஞ்ச  யாகம் செய்து யாக கும்ப நீரை குடும்பத்தினர் அனைவரும் தலையில் தெளித்துக்கொள்ள பிரேத சாபம் நீங்கும். 

சனி, 10 மே, 2014

அஷ்ட கர்ம செயல்களுக்கான கிழமைகள்

                 


                           சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த கிழமைகளில் அந்த காரியங்களை செய்ய ஆரம்பித்தால்  உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு கிழமையில் மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான கிழமைகள்  பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.




அஷ்ட கர்ம பெயர்                கிழமைகள் 




1. வசியம்                            -      ஞாயறு 



2. தம்பனம்                         -       புதன் 



3. மோகனம்                       -       திங்கள் 



4.  உச்சாடனம்                   -       வியாழன்  



5. பேதனம்                           -       செவ்வாய்  



6. ஆகர்ஷணம்                  -       வெள்ளி  



7. வித்வேஷனம்               -       செவ்வாய் 



8. மாரணம்                           -       சனி  



          மேலே சொல்லிய கிழமைகளில்  அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய ஆரம்பித்தால் அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம் என்று சித்தர்கள் சொல்லி சென்றனர்.

வெள்ளி, 9 மே, 2014

அஷ்ட கர்மங்களுக்கு உண்டான திசைகள்

                 


                         சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த திசையை நோக்கி அமர்ந்து அந்த காரியங்களை செய்தால் உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு திசையை பார்த்து அமர்ந்து மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான திசைகள் பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அஷ்ட கர்ம பெயர்                திசைகள் 



1. வசியம்                            -      கிழக்கு 



2. தம்பனம்                         -       தென்மேற்கு 



3. மோகனம்                       -       தெற்கு 



4.  உச்சாடனம்                   -       மேற்கு 



5. பேதனம்                           -        வடக்கு 



6. ஆகர்ஷணம்                  -        வடமேற்கு 



7. வித்வேஷனம்               -        தென்மேற்கு 



8. மாரணம்                           -        தெற்கு 



          மேலே சொல்லிய திசைகளை நோக்கி அமர்ந்து கொண்டு அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம்.

புதன், 30 ஏப்ரல், 2014

யார் சித்தர் ? சித்தர்கள் சொன்னவை!



                                                                 மகான்களும் யோகிகளும் ஒருபோதும் மறைவதில்லை, தமது உடலை ஆடைகளை களைவதை போல களைந்து சூக்கும உடலோடு சிவனுடன் ஒன்றி வாழ்கின்றனர். இதனையே திருமூலர் "யோக சமாதி உகந்தவர் சித்தரே" என்கிறார். இன்றைய காலகட்டத்தில் பல பேர் தனது பெயருக்கு முன்பு ஸ்ரீ, ஸ்ரீலஸ்ரீ, வாலை என்றும், பெயருக்கு பின்னால் சித்தர் என்றும் பட்டங்களை போட்டுக்கொண்டு அலைவதை மக்களை ஏமாற்றி பிழைப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்.

                                                                   அவர்களுக்கே தெரியுமோ தெரியாதோ வாலையை சித்தி செய்த ஒருவன் ஒரு மஹா சித்தர் ஆகிவிடலாம். நாம் போற்றி வணங்கும் பதினென் சித்தர், நவ நாத சித்தர் தொட்டு கடந்த நூற்றாண்டு தோன்றிய கடைப்பிள்ளை சித்தர் வரை வாலை சித்தி செய்துதான் பல சித்துக்களை உலகத்துக்கு செய்து கட்டினர். வாலை சித்தி பெற்ற தவசீலர்கள் அடையாத பலன்கள் உலகில் எதுவுமில்லை, சகல காரிய சித்தி, ரசம், ரசாயனம், அஞ்சனம், பாதுகா சாதனம், மூலிகை, குளிகை, கட்சம், சரஸ்வதம், முதலிய சித்துகளும் அணிமா, மகிமா, லகிமா, கிரிமா, ஈஸித்வம், வசித்வம், பகுரூப சித்தி, சுரூப சித்தி என்னும் அஷ்ட மஹா சித்தி பெற்று சித்தனுக்கு சித்தனாய் பெரும் புகழ் பெற்று இம்மை இன்பத்தை அனுபவித்து தேவி சயுச்யம் அடைவார் என சாஸ்திரங்கள் உரைக்கின்றன. இன்று பெயருக்கு முன் வாலை என்றும் சித்தர் என்றும் போட்டு கொள்ளும் நபர்கள் மேலே சாஸ்திரம் சொல்லும் ஒரு சித்தினையாவது செய்து காட்ட இயலுமா? இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் தந்திரம் என்று வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடனேயே தற்கலத்தில் வாழ்ந்த ரமண மகரிஷி, யோகிராம் சுரத் குமார், ஓஷோ, யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி, சச்சிதானந்த சுவாமிகள் முதல் இன்று வரை வாழ்ந்து வரும் பல சித்திகளை பெற்ற மஹா புருஷர்களும் கூட தன் பெயருக்கு முன்னால் வாலை என்றோ சித்தர் என்றோ அடைமொழிகளை போட்டுக் கொண்டதில்லை என அறியவும். ஏன் சிவனே ஆதிசங்கரராக அவதரித்தும் தன் பெயரை இன்றுவரை ஆதிசங்கரர் என்றே நிலைப்பெற செய்தார் எனவும் அறிக. சித்தர்கள் தமக்காக வாழாதவர்கள், தமக்காக காசு பணம் தேடாதவர்கள், என்றும் இறைவனுக்காகவும், இன்னலுற்ற மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்து கொண்டவர்கள்.

யார் சித்தர் ? சித்தர்கள் சொன்னவை!

"சித்தியெனில் கண்கட்டு வித்தையல்ல
சில்லறையாம் கருமத்துச் செய்கையல்ல

மித்தையெனும் சூனியமாம் மாயமல்ல

மின்னணுவாம் விஞ்ஞான வியப்புமல்ல

சித்தியெனில் ஈசனுடன் ஒன்றாம்சித்தி

சிவனாவானவனேதான் சித்தன் சித்தன்!"




"தானான காயத்தை நிறுத்த வேண்டும்

சதாகாலம் சுக்கிலத்தைக் கட்டவேண்டும்

வேனான மும்மலத்தை யறுக்க வேண்டும்

வெளியான சிதாபாசம் நீக்கவேண்டும்

பானாக முச்சுடரை யறுக்க வேண்டும்

பாழான துலமதை வெறுக்கவேண்டும்

மானான பராபரியை நிர்த்தனம் செய்து

மானிலத்தில் வாழ்பவனே சித்தனாமே"



"பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்டு

பிதமுற்ற பாசஇருளைத் துறந்து

மதமற் றெனதியான் மாற்றிவிட்டாங்கே

திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே"




"நாணயமாய் நடப்பவரே ஞானி

யோகியமாய் நடப்பவரே யோகி

சகலமும் தள்ளியவரே சந்நியாசி

ஆண்டவனை அறிந்தவரே ஆண்டி

ஒழுக்கம் உடையவரே துறவி

சிந்தை தெளிந்திருப்பவன் அவனே சித்தன்

செகமெல்லாஞ் சிவமென்று அறிந்தோன் சித்தன்"





வாழ்க சித்தர்கள்!                                                    வணங்குவோம் சித்தர் மலரடி!

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்

       


                          இன்றைய கால கட்டத்தில் வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடுமையான ஒரு செயல் ஆகிவிட்டது. ஒன்று பல போட்டியாளர்களும், அந்த வியாபார போட்டியல் வாடிக்கையாளர்களை கவர விலை குறைப்பும், பல சலுகைகளும் பரிசுப்பொருட்களை வாடிக்கையளர்களுக்கு அள்ளி வழங்குவதும் போன்ற காரணங்களாலும், செய்யும் வியாபாரங்களில் நல்ல லாபத்தினை நாம் அடைவது என்பது சாத்தியமில்லை. மேலும் நமது ஜாதகங்களில் உள்ள தோஷங்களும், கிரகங்களின் கோட்சாரமும், திசை - புத்தியால் நமக்கு உண்டாகும் பலன்களும் அதாவது நமது கர்மவினை பலன்களும் நம்மை நாம் செய்யும் வியாபாரத்தில்  பெரும் இலாபத்தினை வெற்றிகளை வளர்ச்சியினை பாதிக்கும் அம்சங்களாக விளங்குகின்றன.

       சரி இந்த நிலை மாற நாம் தெய்வ அருளினை தான் நாட வேண்டி இருக்கிறது, நாம் நேரடியாக தெய்வ அருளினை பெறுவது இயலாத காரியம் என்பதை அறிந்த முன்னோர்களும் சித்தர்களும் நாமும் வளமுடன் வாழ என்ற நோக்கிலேயே அருளி சென்றவை தான் எந்திரங்களும் அதற்க்கு உண்டான மந்திரங்களும் அதற்கென உடன் வைக்கும் வசிய மூலிகைகளும் ஆகும். அவ்வகையில் வியாபாரிகள் வியாபாரங்களில் வெற்றி மேல் வெற்றி அடையவும், செல்வங்கள் அடையவும், வாடிக்கையாளர்கள் பெருகவும் சொல்லி சென்ற எந்திரமே "வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்" ஆகும்.

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க